NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை 
    நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் வைத்து சாஹில் கைது செய்யப்பட்டார்.

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    May 30, 2023
    02:18 pm

    செய்தி முன்னோட்டம்

    வடமேற்கு டெல்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பதின் வயது பெண்ணின் பெற்றோர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    உயிரிழந்த சாக்ஷியும்(16) அவரது கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாஹிலும்(20) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சாக்ஷிக்கும் சாஹிலுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு பரிசு பொருட்கள் வாங்க சாக்ஷி கடைக்குச் சென்றிருந்தார்.

    அப்போது, அவரை மடக்கி பிடித்த சாஹில் ​​மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடத்தில் வைத்து சாக்ஷியை தாக்கினார்.

    இந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட 90 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    Details

    குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும்: சாக்ஷியின் பெற்றோர்

    சாஹில் ஒரு கையால் சாக்ஷியை சுவரோடு பிடித்து கொண்டு, மறு கையால் அவரை கத்தியால் குத்துவது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

    இதெல்லாம் ஷஹபாத் டெய்ரி பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதலினால் சாக்ஷி மயக்கமடைந்து கீழே விழுந்த பிறகும், சாஹில் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.

    சாஹில் சாக்ஷியை 20 முறை கத்தியால் குத்தியது மட்டுமல்லாமல், அவரை உதைத்தும், சிமென்ட் பலகையால் தாக்கியும் சித்தரவதை செய்தார்.

    இதனையடுத்து, நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் வைத்து சாஹில் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், "எங்கள் மகளுக்கு நீதி வேண்டும். அவள் கொடூரமாக பலமுறை குத்தி கொல்லப்பட்டாள். குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும்." என்று சாக்ஷியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    குற்றவியல் நிகழ்வு

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    இந்தியா

    கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள் கர்நாடகா
    இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி! சாட்ஜிபிடி
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா

    டெல்லி

    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!  ஆப்பிள் நிறுவனம்
    டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்  இந்தியா

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025