NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்
    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்
    இந்தியா

    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2023 | 03:04 pm 1 நிமிட வாசிப்பு
    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்
    இந்த ஆவணப்படம் 2023ஆம் ஜனவரி மாதம் பிரிட்டனில் வெளியானது.

    "இந்தியா: தி மோடி கொஸ்டின்" ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது குஜராத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு(NGO) ஒன்று அவதூறு வழக்கை தொடர்ந்திருக்கிறது. அந்த NGO தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் இன்று(மே 22) பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2002 குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "இந்த ஆவணப்படம் நாடு மற்றும் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், பிரதமருக்கு எதிரான அவதூறான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், ஜாதிகளை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும்...," என்று தெரிவித்திருக்கிறது. NGO சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த ஆவணப்படம் நீதித்துறைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக வாதிட்டார்.

    பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு தடை விதித்த மத்திய அரசு

    இந்த ஆவணப்படம் 2023ஆம் ஜனவரி மாதம் பிரிட்டனில் வெளியானது. இந்தியாவில் வெளியாகவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பற்றி வெளியான இந்த பிபிசி ஆவண படத்திற்கு இந்தியாவில் பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. 2002 கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படத்தை இந்திய அரசாங்கம் தடை செய்தது. சமூக ஊடக நிறுவனங்களிடம் இந்த ஆவணப்படத்தின் இணைப்பை அகற்றுமாறு கேட்டு கொண்டதன் மூலம் இந்த ஆவணப்படத்தின் பரவலை இந்திய அரசு அப்போது கட்டுப்படுத்தி இருந்தது. இந்த நடவடிக்கையை அப்பட்டமான "சென்சார்ஷிப்"(தணிக்கை) என்று எதிர்க்கட்சிகள் சாடின. இந்நிலையில், இந்த ஆவணப்படத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மத்திய அரசு
    நரேந்திர மோடி
    மோடி
    பிரதமர்

    இந்தியா

    மகளிர் ஹாக்கி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா ஹாக்கி போட்டி
    '2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர்  ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் ஒரே நாளில் 473 கொரோனா பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு கொரோனா
    அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகளை பெற வேண்டாம் என சுற்றறிக்கை  தமிழ்நாடு

    மத்திய அரசு

    நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்  இந்தியா
    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி  பிரதமர் மோடி
    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு  இந்தியா
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை

    நரேந்திர மோடி

    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  இந்தியா
    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி  இந்தியா
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  இந்தியா
    'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்  இந்தியா

    மோடி

    பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி இந்தியா
    சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா
    கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்! பிரதமர் மோடி

    பிரதமர்

    தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டன்
    மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023