NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்
    இந்த ஆவணப்படம் 2023ஆம் ஜனவரி மாதம் பிரிட்டனில் வெளியானது.

    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2023
    03:04 pm

    செய்தி முன்னோட்டம்

    "இந்தியா: தி மோடி கொஸ்டின்" ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது குஜராத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு(NGO) ஒன்று அவதூறு வழக்கை தொடர்ந்திருக்கிறது.

    அந்த NGO தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் இன்று(மே 22) பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    2002 குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "இந்த ஆவணப்படம் நாடு மற்றும் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், பிரதமருக்கு எதிரான அவதூறான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், ஜாதிகளை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும்...," என்று தெரிவித்திருக்கிறது.

    NGO சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த ஆவணப்படம் நீதித்துறைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக வாதிட்டார்.

    DETAILS

    பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு தடை விதித்த மத்திய அரசு

    இந்த ஆவணப்படம் 2023ஆம் ஜனவரி மாதம் பிரிட்டனில் வெளியானது. இந்தியாவில் வெளியாகவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி பற்றி வெளியான இந்த பிபிசி ஆவண படத்திற்கு இந்தியாவில் பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

    2002 கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படத்தை இந்திய அரசாங்கம் தடை செய்தது.

    சமூக ஊடக நிறுவனங்களிடம் இந்த ஆவணப்படத்தின் இணைப்பை அகற்றுமாறு கேட்டு கொண்டதன் மூலம் இந்த ஆவணப்படத்தின் பரவலை இந்திய அரசு அப்போது கட்டுப்படுத்தி இருந்தது. இந்த நடவடிக்கையை அப்பட்டமான "சென்சார்ஷிப்"(தணிக்கை) என்று எதிர்க்கட்சிகள் சாடின.

    இந்நிலையில், இந்த ஆவணப்படத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    நரேந்திர மோடி
    மோடி

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    இந்தியா

    அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு! பள்ளி மாணவர்கள்
    பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!  போக்குவரத்து விதிகள்
    சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் டெல்லி
    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி சென்னை

    மத்திய அரசு

    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை ஆன்லைன் விளையாட்டு
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்  இந்தியா
    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!  தமிழ்நாடு
    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு  கோவை

    நரேந்திர மோடி

    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் இந்தியா
    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் இந்தியா
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா

    மோடி

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025