NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை
    2021 ஆம் ஆண்டு பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கு மரண தண்டனை

    கேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை

    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2024
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    2021 ஆம் ஆண்டு பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 15 குற்றவாளிகளுக்கு மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

    தண்டனை காலத்தின் அளவு பின்னர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும்.

    குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் இப்போது தடைசெய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

    பாஜக ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளரான ரஞ்சித் ஸ்ரீனிவாசன், டிசம்பர் 19, 2021 அன்று அவரது வீட்டில், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    கேரளா

    குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது

    முன்னதாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் 8 பேர் நேரடியாக இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.

    மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் கொலைக் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கண்டறிந்தது. அந்த நான்கு பேரும் கொலை செய்தவர்களுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கிரிமினல் சதி மற்றும் கொலைக் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கேரளா

    7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை திருவனந்தபுரம்
    கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு  காவல்துறை
    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு  கடத்தல்
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா

    கொலை

    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் டெல்லி
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்
    ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு  மருத்துவக் கல்லூரி
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025