Page Loader
கேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை
2021 ஆம் ஆண்டு பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கு மரண தண்டனை

கேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை

எழுதியவர் Sindhuja SM
Jan 30, 2024
02:36 pm

செய்தி முன்னோட்டம்

2021 ஆம் ஆண்டு பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 15 குற்றவாளிகளுக்கு மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது. தண்டனை காலத்தின் அளவு பின்னர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் இப்போது தடைசெய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆவர். பாஜக ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளரான ரஞ்சித் ஸ்ரீனிவாசன், டிசம்பர் 19, 2021 அன்று அவரது வீட்டில், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

கேரளா

குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது

முன்னதாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் 8 பேர் நேரடியாக இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் கொலைக் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கண்டறிந்தது. அந்த நான்கு பேரும் கொலை செய்தவர்களுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கிரிமினல் சதி மற்றும் கொலைக் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.