NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு இனி கைத்தடி வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு இனி கைத்தடி வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
    திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு இனி கைத்தடி வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

    திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு இனி கைத்தடி வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Aug 16, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதி அலிப்பிரி மலைப்பகுதியில் அண்மையில் குடும்பத்தோடு நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியது.

    இதனையடுத்து அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சிறிது நேரத்திலேயே வேறு ஒரு சிறுத்தை அதே பகுதிக்கு வந்ததை கண்டு அங்கிருந்த பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து சிறுத்தையினை விரட்டியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தினை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல விதிமுறைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    திருப்பதி 

    12 வயத்துக்குட்பட்டோர் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே மலையேற அனுமதி 

    இதனிடையே திருப்பதி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக திரிந்த சிறுத்தை, மலையின் கீழே இறங்கி மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் புகுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    இதனால் மலையேறும் பக்தர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கைத்தடி வழங்கப்படும் என்னும் அறிவிப்பினை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இதன்படி திருப்பதி அலிப்பிரி வழியே மலையேறும் பக்தர்களுக்கு தேவஸ்தான பாதுகாவலர்கள் இன்று(ஆகஸ்ட்.,16) கைத்தடி வழங்கி, இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளனர்.

    இந்த கைத்தடிகள் கோயில் அருகே சென்றதும் மீண்டும் சேகரித்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

    அதேபோல் 12 வயத்துக்குட்பட்டோர் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே மலைப்பாதையில் ஏற அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    வனத்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025