NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு 
    CERT-In, இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2023
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    CoWIN போர்ட்டலில் உள்ள தரவுகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் இது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் "விஷமம் நிறைந்தது" என்றும் மத்திய அரசு இன்று(ஜூன் 12) கூறியுள்ளது.

    கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு தளமான CoWINனில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் டெலிகிராம் செயலியில் கிடைப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இது குறித்து விவரித்த மத்திய சுகாதார அமைச்சகம், "சுகாதார அமைச்சகத்தின் CoWIN போர்டல் தரவு தனியுரிமைக்கான பாதுகாப்புகளுடன் செயல்படும் முற்றிலும் பாதுகாப்பான செயலியாகும். OTP அங்கீகார அடிப்படையிலான தரவு அணுகல் மட்டுமே வழங்கப்படுகிறது" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தஜ்ஸ்ப்ச்ஜ்ஸ்

    CERT-In இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது

    "அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் முக்கியமான தனிப்பட்ட விவரங்கள் சமூக ஊடக தளமான டெலிகிராமில் கசிந்துள்ளன" என்று 'சவுத் ஆசியா இன்டெக்ஸ்' செய்தி நிறுவனம் இன்று காலை ட்விட்டரில் கூறி இருந்தது.

    ஆதார், வாக்காளர்-ஐடி, பாஸ்போர்ட் எண்கள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் செல்போன் எண்கள் ஆகியவை CoWINனில் இருந்து கசிந்துவிட்டதாக பல செய்திகள் வெளியாகின.

    இதற்கு பதிலளித்த மத்திய அரசு, "வலை பயன்பாட்டு ஃபயர்வால், ஆன்டி-DDoS, SSL/TLS, வழக்கமான பாதிப்பு மதிப்பீடு, அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை," போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் CoWINனில் இருப்பதாக கூறியுள்ளது.

    மேலும், கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான CERT-In, இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    கோவிட்
    கோவிட் தடுப்பூசி

    சமீபத்திய

    அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    ஈபிஎப்ஓ 3.0 முதல் செபி விதி மாற்றம் வரை; ஜூன் மாதம் அமலாகும் மாற்றங்கள் வருங்கால வைப்பு நிதி
    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    இந்தியா

    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்  மல்யுத்த வீரர்கள்
    விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லி
    குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி
    51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது  ரயில்கள்

    மத்திய அரசு

    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  அதிமுக
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு  இந்தியா
    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி  பிரதமர் மோடி

    கோவிட்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி கொரோனா
    மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு கொரோனா
    ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொரோனா
    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு! கொரோனா

    கோவிட் தடுப்பூசி

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    பூஸ்டர் டோஸாக 'கோவோவாக்ஸ்' தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி - சீரம் இந்தியா நிறுவனம் தகவல் இந்தியா
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும் கோவிட்
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் நோய்த்தடுப்பு சிகிச்சை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025