NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி 
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி 

    எழுதியவர் Nivetha P
    Jul 21, 2023
    03:07 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தினை துவங்கியதையடுத்து, கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது.

    கடந்த மே மாதம் 4ம்தேதி குகி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காங்போக்பி மாவட்டம், பி பைனோம் என்னும் கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கலவரக்காரர்கள், அந்த கிராமத்திற்கு தீவைக்க முயற்சித்துள்ளனர்.

    அப்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள அப்பகுதி மக்கள் சிதறி ஓடியுள்ளனர்.

    அதில் 3 பெண்களை பிடித்த கலவரக்காரர்கள் அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர்.

    20, 40 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க அந்த 3 பெண்களுள் இளம்வயதான பெண்ணினை மானப்பங்கம் செய்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

    கலவரம் 

    பாதிக்கப்பட்ட இளம்பெண் பேட்டி 

    இதனை தடுக்க முயன்ற அப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில், பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கடந்த 18ம்தேதி பூஜ்யம் என்னும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பூஜ்யம் என்றால் அதிகார வரம்பின்றி எந்த காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்வதாகும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.

    அதில், "வன்முறையினை கண்டு பயந்து ஓடிய எங்களை, தவுபால் காவல்நிலையத்தினை சேர்ந்த காவலர்கள்தான் மீட்டனர். ஆனால் காவல் நிலையத்திற்கு செல்லும் இடையிலேயே மீண்டும் கலவரக்காரர்கள் எங்களை பிடித்துக்கொண்டனர்" என்றும்,

    "அப்போது காவல்துறையினர் தங்களை கலவரக்காரர்களிடம் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    பலாத்காரம்
    மணிப்பூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025