NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம் 
    ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம்

    ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.

    இவர்களுள் பலர் சுற்றுலா தலங்களை காண்பதில் ஆர்வம் காட்டுவதைவிட இயற்கை சூழ்ந்த அமைதியான பகுதிகளில் தங்கி ஒருசில நாட்கள் ஓய்வெடுக்க விரும்புகிறார்கள்.

    அதற்காக புறநகர் பகுதிகளில் காட்டேஜ், ரிசார்ட் போன்ற இடங்களில் அறை எடுத்து தங்குகிறார்கள்.

    இன்னும் சிலர் வனப்பகுதிகளில் உள்ள ரெசார்ட்டுகளில் அமைக்கப்பட்டுள்ள மரக்குடில்களில் தங்க அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளனர்.

    சுற்றுலா 

    தற்காலிக டெண்டுகள் அமைத்து தங்கும் சுற்றுலா பயணிகள் 

    மேலும் சிலர் இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று தாங்களே தற்காலிக டெண்டுகள் அமைத்து அதில் தங்குகிறார்கள்.

    இது போன்று தங்க தனியார் நிறுவனங்கள் அதிகளவில் கட்டணங்களை வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

    எனினும் சுற்றுலா பயணிகள் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் கட்டணத்தினை செலுத்தி தங்குகிறார்கள் என்றும் தெரிகிறது.

    இந்நிலையில் தற்போது தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3.20 கோடி செலவில் ஊட்டியில் உள்ள ஏரிக்கரை பகுதிகளில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தீவிரம் 

    குறைந்த கட்டணத்தில் மரக்குடில்கள் 

    இப்பணிகள் வரும் கோடை காலத்திற்குள் முடிக்கப்பட்டு சீசனுக்கு சுற்றுலா வரும் பயணிகளை இவ்விடங்களில் தங்க அனுமதிக்கும் எண்ணத்தில் நடந்து வருகிறது.

    இப்பணிகளை ஆய்வு செய்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தரமான வகையில், குடில்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின்படி அமைக்கப்படும் இந்த மரக்குடில்கள், டெண்ட்களில் தங்க தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தினை விட குறைந்தளவில் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சுற்றுலா 

    முதற்கட்ட பணிகள் ஊட்டி ஏரிக்கரைகளில் நடக்கிறது 

    மேலும், இதில் தங்க சுற்றுலா பயணிகள் ஆன்லைன் புக்கிங் செய்ய ஏதுவான வசதிகள் செய்யப்படவுள்ள நிலையில், குறைந்த கட்டணத்தில் இயற்கை சூழலில் தங்கும் வாய்ப்பு சுற்றுலாவாசிகளுக்கு கிடைப்பதோடு சுற்றுலாத்துறைக்கும் இதன் மூலம் வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதன் முதற்கட்டமாக ஊட்டி எரிக்கரைகளில் மரத்திலான 4 குடில்கள், 2 ட்ரீ டாப் குடில்கள், 4 டெண்டுகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீலகிரி
    தமிழக அரசு
    சுற்றுலாத்துறை
    ஊட்டி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நீலகிரி

    நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி  நீட் தேர்வு
    'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர்  ஆஸ்கார் விருது
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரி
    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  இந்தியா

    தமிழக அரசு

    3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி  ஆர்.என்.ரவி
    துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    பி.ஹெச்.டி. படிக்கும் பழங்குடியின, ஆதிதிராவிட மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை
    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழக முதல்வர்

    சுற்றுலாத்துறை

    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி இந்தியா
    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை
    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு தமிழ்நாடு

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025