NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது?
    இந்த விவாதத்தில் 5 மத்திய அமைச்சர்களும் 10 பாஜக எம்பிகளும் பேச இருக்கிறார்கள்.

    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 08, 2023
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் இன்று(ஆகஸ்ட் 8) மக்களவையில் தொடங்கியது.

    விவாதத்தின் முதல் நாளான இன்று, மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள், மணிப்பூரில் பெரும் பிளவை பாஜக அரசு உருவாக்குவதாக குற்றம் சாட்டினர்.

    இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் "மௌன விரதத்தை" முறியடிக்கவே, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன என்று கூறினார்.

    'ஒரே இந்தியா' என்று பேசும் பாஜக அரசு இரண்டு மணிப்பூர்களை உருவாக்கியுள்ளதாக கூறிய அவர், ஒரு மணிப்பூர் மலைகளிலும்(பழங்குடியினர்) மற்றொன்று பள்ளத்தாக்கிலும்(மெய்த்தே சமூகம்) வாழ்கிறது என்று பேசினார்.

    ஹுட்க்கி

    மேலும் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் பேசியாதவது:

    "மணிப்பூர் நீதியைக் கோருகிறது.

    'எங்கும் அநீதி இருந்தால், எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று அர்த்தம்' என்பது மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வார்த்தைகளாகும்.

    மணிப்பூர் எரிந்தால் இந்தியா முழுவதும் எரியும். மணிப்பூர் பிளவுபட்டால் நாடும் பிளவுபடும்.

    நாட்டின் தலைவர் என்ற முறையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்று, மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி சபைக்கு வந்து பேச வேண்டும்.

    ஆனால், லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பேசமாட்டேன் என அவர் மௌன விரதம் கடைபிடிக்கிறார்.

    மணிப்பூரில் அவரது இரட்டை எஞ்சின் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    அதனால்தான் மணிப்பூரில் 150 பேர் உயிரிழந்தனர். சுமார் 5000 வீடுகள் எரிக்கப்பட்டன. சுமார் 60,000 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். "

    ட

    ராகுல் காந்தியின் உரை தள்ளி வைக்கப்பட்டது 

    இன்று இந்த விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது.

    அவரது பெயரும் விவாதிப்பவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இன்று விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.

    பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடாளுமன்றத்தில் இல்லாததால் ராகுல் காந்தியின் உரையை தாமதப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    ராகுல் காந்தி எப்போது உரையாற்ற போகிறார் என்பதை காங்கிரஸ் கட்சி 3 மணி நேரத்திற்கு முன்புதான் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

    விவாதிப்பவர்களின் பெயர் பட்டியலில் இருந்து ராகுல் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை சுட்டி காட்டிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "ஒருவேளை ராகுல் காந்தி தாமதமாக எழுந்திருப்பாரோ என்னவோ" என்று நக்கலாக கூறினார்.

    இகிவ்ஜ்

    'பிரதமர் தனது தவறை ஏற்க விரும்பவில்லை': கௌரவ் கோகோய்

    மேலும் பேசிய எம்பி கௌரவ் கோகோய், "பிரதமர் மோடி மௌனமாக இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, இது மாநில அரசின் பெரும் தோல்வி. இரண்டாவது, இது உள்துறைத் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெரும் தோல்வி. மூன்றாவது, பிரதமர் தான் தவறு செய்ததை ஏற்க விரும்பவில்லை." என்று கூறினார்.

    லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் மணிப்பூர் குறித்து பிரதமர் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

    இந்த விவாதத்திற்கு பதிலளித்த பாஜக, "1993 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் மணிப்பூரில் பெரும் வன்முறை நடந்தன. ஆனால், இரண்டு வன்முறைகளின் போதும் காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில் அறிக்கையை வெளியிடவில்லை" என்று குற்றம்சாட்டியது.

    டியான்

    'வெளிநாட்டு அரசாங்கங்கள் பாஜக அரசை குற்றம்சாட்டியுள்ளன':  டி.ஆர்.பாலு பேச்சு 

    அதற்கு பிறகு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரியா சுலே, "பிரதமர் மோடி தலைமையிலான கட்சி பெண்களை அவமானப்படுத்தியுள்ளது. மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    அதன் பிறகு பேசிய, திமுக எம்பி டி.ஆர்.பாலு, "பிரதமர் இப்போது எங்கே இருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தான் அவருக்கு பொதுமக்கள் வாக்களித்துள்ளனர். அவர் இங்கே வருவதை எது தடுக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

    "ஐரோப்பிய நாடாளுமன்றமும், பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் மணிப்பூரில் நிலவும் சட்டமீறலைக் கண்டித்து பாஜக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளன." என்றும் அவர் கூறினார்.

    இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர இருக்கும் இந்த விவாதத்தில் 5 மத்திய அமைச்சர்களும் 10 பாஜக எம்பிகளும் பேச இருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    நாடாளுமன்றம்
    மக்களவை
    காங்கிரஸ்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மணிப்பூர்

    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ட்விட்டர்
    மணிப்பூர் கலவரம்: 4 பேர் கைது; முதல்வர் பதவி விலக மாட்டார் எனத்தகவல் கலவரம்
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    விதி எண்.176 Vs.விதி எண்.267; நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் - மத்திய அரசு இடையே மோதல்  மத்திய அரசு

    நாடாளுமன்றம்

    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    காங்கிரஸ்

    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2 இந்தியா
    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025