NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை மற்றும் மதுரையில் மெட்ரோவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரியில் துவங்கும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரியில் துவங்கும்
    மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன

    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரியில் துவங்கும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 24, 2024
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவையில் ரூ.10,740 கோடி மற்றும் மதுரையில் ரூ.11,340 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் பிப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் என்று CMRL மேலாண்மை இயக்குனர் சித்திக் இன்று தெரிவித்தார்.

    கோவையில் செய்தியாளர்களுடன் பேட்டியளித்த சித்திக்,"கோவை மாநகராட்சியில் 32 ஸ்டேஷன்களுடன், 2 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு மத்திய அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு சில கூடுதல் விவரங்களை கேட்டுள்ளது, அவற்றும் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்." எனத்தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    10,740 கோடி ரூபாய் செலவில் 32 ரயில் நிலையங்களுடன் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ; வரும் பிப்ரவரியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் மெட்ரோ நிறுவன மேலாண் இயக்குனர் சித்திக் அறிவிப்பு#Coimbatore #MetroRail  #CMRL #newsupdate #tamilnewsnow pic.twitter.com/6WFnnqhSa0

    — Tamil News Now (@TamilNews_Now) December 24, 2024

    மதுரை மெட்ரோ

    மதுரை மெட்ரோவின் அப்டேட்

    மெட்ரோ பாதையில், 30 மீட்டர் இடைவெளியில் ஒரு தூண் கட்டப்படும்.

    மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகிறது.

    மதுரையில், 32 கிலோமீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

    மெட்ரோ கட்டமைப்பு 10 -15 ஆண்டுகளுக்காக வடிவைப்பது அல்ல. அது 150 ஆண்டுகளுக்கான கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

    விவரங்கள்

    கோவை மெட்ரோவின் விவரங்கள்

    மேலும், "இந்த மெட்ரோ திட்டம் 700 பயணிகளை ஏற்றி செல்ல 3 பெட்டிகள் இயக்க திட்டம். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தொடங்கும். 16 ஏக்கர் நிலம் பணிமனை அமைப்பதற்கும், 10 ஹெக்டேர் நிலம் வழித்தடம் அமைப்பதற்கும் தேவைப்படும். பணிமனை, சக்தி பொறியியல் கல்லூரி அருகே அமைக்கப்படும், மேலும் ஒரு சிறிய பணிமனை வழியம்பாளையம் பிரிவில் அமைக்கப்படும்." என்றார்.

    இந்த திட்டம் 3 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்தப்படும்.

    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டம் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

    நிலம் பெற்றுக்கொள்ளும் பணி பிப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெட்ரோ
    கோவை
    மதுரை

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    மெட்ரோ

    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மதுரை
    திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்  சென்னை

    கோவை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு ஈஷா யோகா

    மதுரை

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் முதல் அமைச்சர்
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2 சிலைகள், 2 கொடிமரங்கள் திருட்டு இந்தியா
    மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட திட்டம்? விஜயகாந்த்
    தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு மு.க.அழகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025