Page Loader
பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள் 

பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள் 

எழுதியவர் Sindhuja SM
Jun 09, 2024
02:07 pm

செய்தி முன்னோட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) பல தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இன்று மாலை 7.15 மணிக்கு மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்த தேநீர் கூட்டத்தில் எல்ஜேபியின் சிராக் பாஸ்வான், பாஜகவின் பியூஷ் கோயல், எஸ் ஜெய்சங்கர் மற்றும் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஜேடி(எஸ்) தலைவர் எச்டி குமாரசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 100 நாள் செயல் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மோடி தனது NDA சகாக்களிடம் கூறியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா 

மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி 

மேலும், அந்தந்த துறைகளின் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவில் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் NDA தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார். ஐந்தாண்டு கால வரைபடம் தயாராக உள்ளது என்றும், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் அனைவரும் அதை நோக்கிச் செயல்படத் தொடங்க வேண்டும் என்றும் மோடி அவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கிறார். அந்த மெகா நிகழ்வுக்கு முன்னதாக, அவர் டெல்லியில் உள்ள ராஜ்காட் மற்றும் சதைவ் அடல் ஆகிய இடங்களுக்குச் சென்று மகாத்மா காந்தி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினார்.