NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு
    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்

    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    04:35 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு ஒரு மின்சார ரயிலும், திருவள்ளூருக்கு இரண்டு மின்சார ரயில்களும் கூடுதலாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    இதன்படி, திங்கட்கிழமை (செப்டம்பர் 9) முதல் ரயில் எண். 43012, ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும். இதன் முதல் பயணம் ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு தொடங்கும்.

    ரயில் எண். 43219 திருவள்ளூரில் இருந்து காலை 10:40 மணிக்கு கிளம்பி சென்னை சென்ட்ரலுக்கு செல்லும்.

    அதேபோல் மற்றொரு ரயில் திருவள்ளூரில் இருந்து மாலை 3.50 மணிக்கு கிளம்பி சென்ட்ரல் நோக்கி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேவை நீட்டிப்பு

    ரயில் சேவை நீட்டிப்பு

    புதிய ரயில் சேவைகளைத் தவிர சில ரயில் சேவைகள் திங்கட்கிழமை கூடுதல் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ரயில் எண். 42017 சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 12.10க்கு கிளம்பி கும்மிடிப்பூண்டி வரை இயங்கி வந்த நிலையில் தற்போது சூல்லூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ரயில் எண். 40202, இரவு 8.55க்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ரயில் எண். 40206, இரவு 10.11 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நேரம் மாற்றம்

    ரயில்களின் நேரம் மாற்றம்

    மேலும், ரயில் எண். 40208, இரவு 10.55 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ரயில் எண். 40210, இரவு 11.20 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவை தவிர சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் மின்சார ரயில் சேவைகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, அரக்கோணம் வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூல்லூர்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களும் சுமார் 5 முதல் 15 நிமிடங்கள் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் இயங்கும்.

    ட்விட்டர் அஞ்சல்

    தென்னக ரயில்வே அறிவிப்பு

    Time Table update – Revised timings for the following EMU train services with effect from 09.09.2024.

    Passengers, kindly take note.#SouthernRailway #RailwayUpdate #RailwayAlert pic.twitter.com/PlB3Kwvrrz

    — DRM Chennai (@DrmChennai) September 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    சென்னை

    மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம்  மெட்ரோ
    ஆவணி அவிட்டத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் திருவண்ணாமலை
    சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு தமிழக அரசு

    ரயில்கள்

    ரயில் சேவை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இந்திய ரயில்வே இந்தியா
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில் நிலையம்
    தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து தமிழகம்

    தமிழ்நாடு செய்தி

    இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு ஹாக்கி போட்டி
    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தினம்
    முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் மு.க.ஸ்டாலின்
    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல் டிஎன்பிஎஸ்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025