NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 
    ஆம் ஆத்மியை சேர்ந்த ஒரு பெரும் தலைவர் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 02, 2023
    02:49 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் ஏற்கனவே 5 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்ததால், இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்படும் கூடுதல் குற்றப்பத்திரிகை இதுவாகும்.

    ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியான சஞ்சய் சிங், இந்த வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    ஏய்த்து

    ஆம் ஆத்மிக்கு தொடர்ந்து விழும் அடிகள் 

    டெல்லி மதுபானக் கொள்கை சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் சிங்கிடம் மத்திய புலனாய்வு அமைப்பினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய பின் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் தினேஷ் அரோரா, சஞ்சய் சிங்க்கு எதிராக 'அப்ருவராக' மாறியதால், சஞ்சய் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சஞ்சய் சிங்க்கு, அரோரா இரண்டு முறை 1 கோடி ரூபாய்(மொத்தம் 2 கோடி) கொடுத்தது விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத்துறை ரிமாண்ட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஆம் ஆத்மியை சேர்ந்த ஒரு பெரும் தலைவர் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

    இதற்குமுன், டெல்லி அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும், முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அமலாக்க இயக்குநரகம்
    அமலாக்கத்துறை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    டெல்லி

    போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் காற்றை விட 12 மடங்கு மோசமானது டெல்லியின் காற்று மாசு  காற்று மாசுபாடு
    நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு  நேபாளம்
    மூச்சுத்திணற வைக்கும் காற்று மாசு; டெல்லியில் போட்டியை திட்டமிட்டபடி நடத்த ஐசிசி முடிவெடுத்ததன் பின்னணி இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து  உச்ச நீதிமன்றம்

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025