NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்
    ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்

    ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 02, 2024
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பை சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

    இவருடன், காங்கிரஸ் தலைவர் ஆலம்கிர் ஆலன் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) சத்யானந்த் போக்தாவும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    முன்னதாக நேற்று கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து, புதிய அரசாங்கத்தை அமைக்க தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதனை தொடர்ந்து இன்று பதவி ஏற்பு விழா நடந்தது.

    எனினும், இப்போது, ​​சம்பை சோரனுக்கு ஒரு பெரிய சோதனை காத்திருக்கிறது.

    தற்போது அவர் சட்டசபையில் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    எனினும், 43 எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஹேமந்த் சோரன்

    அமலாக்கத்துறை காவலில் ஹேமந்த் சோரன் 

    நிலமோசடி மற்றும் அது சார்ந்த பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் இருந்தார்.

    இந்த கைது தொடர்பாகவும், பெயில் தொடர்பாகவும் இன்று உச்சநீதிமன்றத்தை நாடிய ஹேமந்த் சோரனின் மனுவை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்.

    மாறாக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தது.

    இந்த நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் 5 நாள் ED காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமலாக்கத்துறை காவலில் ஹேமந்த் சோரன் 

    Former Jharkhand CM and JMM executive president Hemant Soren sent to 5-day ED custody.

    He was arrested by the Directorate of Enforcement (ED) in a money laundering case related to the alleged land scam on 31st January. pic.twitter.com/SO9FUz1IIv

    — ANI (@ANI) February 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்
    ஹேமந்த் சோரன்
    முதல் அமைச்சர்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரக ஊழியர் உட்பட இருவர் சுட்டுக்கொலை அமெரிக்கா
    காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்; தொடரும் துப்பாக்கிச் சண்டை  ஜம்மு காஷ்மீர்
    மற்றொரு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரியை 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்ட இந்தியா இந்தியா
    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை ஆய்வு மையம்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது கொலை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இந்தியா

    ஹேமந்த் சோரன்

    "ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம் ஸ்டாலின்
    கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு உச்ச நீதிமன்றம்

    முதல் அமைச்சர்

    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி  தமிழக அரசு
    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை வானிலை அறிக்கை
    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  புயல் எச்சரிக்கை
    தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு தெலுங்கானா

    காங்கிரஸ்

    தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர் தெலுங்கானா
    காந்தி குடும்ப வழிபாடு காங். வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக பிரணாப் ஏன் நம்பினார்?  ஜவஹர்லால் நேரு
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  பாஜக
    காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது  ஒடிசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025