NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு
    GST வலைப்பின்னலை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு

    GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 09, 2023
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜிஎஸ்டி வலைப்பின்னலை (GST Network), பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை நேற்று (ஜூலை 8) வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.

    இதனைத் தொடர்ந்து இனி ஜிஎஸ்டி தொடர்பான பணமோசடிக் குற்றங்கள் குறித்து விசாரிக்க, அவை தொடர்பான தகவல்களை, ஜிஎஸ்டி வலைப்பின்னலானது அமலாக்கத்துறை மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமைப்பான Financial Intelligent Unit (FIU) ஆகிய அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக, CCI, ரிசர்வ் வங்கி, செபி மற்றும் IRDAI ஆகிய அமைப்புகளும் அமலாக்கத்துறை மற்றும் FIU அமைப்புகளுடன் தங்களிடம் உள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ஜிஎஸ்டி

    ஜிஎஸ்டி வலைப்பின்னல் என்றால் என்ன? 

    ஜிஎஸ்டி வலைப்பின்னல் என்பது மத்திய, மாநில அரசுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஜிஎஸ்டி குறித்த தகவல்களை பதிவு செய்யும் மற்றும் சேமிக்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப அமைப்பாக இருந்து வருகிறது.

    ஜிஎஸ்டியில் புதிய பதிவுகளை சேர்ப்பது முதல், வரி செலுத்துபவர்களின் சுயவிவரங்களை நிர்வகிப்பது மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆவணங்களைச் சரிபார்ப்பது வரை அனைத்து சேவைகளையும் கவனித்து வருகிறது இந்த ஜிஎஸ்டிஎன் அமைப்பு.

    ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களான, பொய்யாக வரி செலுத்தியதற்கான ஆதாரத்தை உருவாக்குவது மற்றும் பொய்யான விலைப்பட்டியலை சமர்ப்பிப்பது உள்ளிட்ட குற்றங்கள் அனைத்தும் இனி பணமோசடிச் சட்டத்தின் கீழேயே பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    மத்திய அரசு

    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மணிப்பூர்
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் ரூ.999 விலையில் வெளியானது ஜியோவின் புதிய 'ஜியோ பாரத் போன்' ஜியோ
    தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம்  விமான சேவைகள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 4 தங்கம் வெள்ளி விலை
    'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025