NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி
    பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 10, 2025
    09:44 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குஜராத்தின் கட்ச் எல்லையில் உள்ள ஹராமி நாலா மற்றும் காவ்டா பகுதிகளுக்கு அருகே பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.

    அதே நேரத்தில் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லாவில் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், அங்கு ட்ரோன்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வழி வாகனங்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பீரங்கி தாக்குதல்

    பல இடங்களில் பீரங்கி தாக்குதல்

    இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் (DGMOக்கள்) இடையே இந்திய நேரப்படி பிற்பகல் 3:35 மணிக்கு அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் மாலை 5 மணி முதல் நிறுத்துவதாக ஒப்பந்தம் எட்டப்பட்டது.

    எனினும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லை (IB) ஆகியவற்றில் பல இடங்களில் போர் நிறுத்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டன.

    ஜம்முவின் அக்னூர், ரஜோரி, ஆர்எஸ் புரா மற்றும் பலன்வல்லா செக்டர்களில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் முழு பலத்துடன் பதிலடி கொடுக்க இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) அறிவுறுத்தப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான் ராணுவம்
    இந்திய ராணுவம்
    ஜம்மு காஷ்மீர்
    குஜராத்

    சமீபத்திய

    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்
    முடிவுக்கு வந்தது மோதல்; ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படுகிறதா? அருண் துமல் சொன்னது இதுதான் ஐபிஎல் 2025
    தாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன? இந்தியா
    யாரெல்லாம் ஓட்ஸ் சாப்பிடக் கூடாது; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை ஆரோக்கியம்

    பாகிஸ்தான் ராணுவம்

    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்
    'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை!  இம்ரான் கான்
    ஊழல் வழக்கில் ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்

    இந்திய ராணுவம்

    Op Sindhoor: இந்திய ராணுவம் தாக்கிய 9 பயங்கரவாத இலக்குகள் எவை? எப்படி? பயங்கரவாதம்
    லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor ஆபரேஷன் சிந்தூர்
    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்

    ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம் பஹல்காம்
    போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள் இந்திய ராணுவம்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு இடித்தது பயங்கரவாதம்
    பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்து அறிக்கை விஜய் ஆண்டனி

    குஜராத்

    அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ள தனித்துவமான விஷயங்கள் முகேஷ் அம்பானி
    குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட 3,300 கிலோ போதை பொருட்கள் போதைப்பொருள்
    கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் இந்தியா
    வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: 2 பேர் கைது  அகமதாபாத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025