Page Loader
டிக்கெட் விலை ஆறு ரூபாய் தானா? டவுன் பஸ்ஸில் பயணித்த கேபிடல் மைண்ட் நிறுவன சிஇஓ ஷாக்
டவுன் பஸ்ஸில் டிக்கெட் ரூ.6 இருப்பது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்திய கேபிடல் மைண்ட் சிஇஓ

டிக்கெட் விலை ஆறு ரூபாய் தானா? டவுன் பஸ்ஸில் பயணித்த கேபிடல் மைண்ட் நிறுவன சிஇஓ ஷாக்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 02, 2025
08:25 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரின் பொது போக்குவரத்தின் மலிவு விலையை எடுத்துக்காட்டும் வகையில் கேபிடல் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான தீபக் ஷெனாய் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. வழக்கமாக தனது அலுவலகத்திற்கு நடந்து செல்லும் ஷெனாய், முழங்கால் காயம் காரணமாக பேருந்து பயணத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கு டவுன் பஸ் கட்டணம் ரூ.6 ஆகக் குறைவாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். எக்ஸ் தளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், குறைந்த விலையில் இருப்பது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். மேலும், பேருந்தில் யுபிஐ கியூஆர் ஸ்கேனர் பொருத்தப்பட்டிருப்பதால் டிஜிட்டல் கட்டணங்களின் வசதியையும் குறிப்பிட்டார்.

முக்கியத்துவம்

பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதம்

தொடர்ச்சியான பதிவில், குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்தினாலும், குறுகிய தூர பேருந்து பயணத்தின் மலிவு விலை எதிர்பாராதது என்று அவர் குறிப்பிட்டார். அவரது கருத்துகள் ஆன்லைனில் விவாதங்களைத் தூண்டின. பல பயனர்கள் அணுகக்கூடிய மற்றும் மலிவான பொது போக்குவரத்தின் முக்கியத்துவத்தைப் பாராட்டினர். சில பயனர்கள் நன்கு ஊக்குவிக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் மலிவு விலையை உறுதி செய்வதன் மூலம் நகர்ப்புற பயணத்தை மாற்றும் என்று வலியுறுத்தினர். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களின் பொருளாதார நல்வாழ்வுக்கு வலுவான பொதுப் போக்குவரத்து அமைப்பு மிக முக்கியமானது என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

எக்ஸ் தள பதிவு