NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்
    ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும், ஒரு வாரத்திற்குள் CAA அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்

    இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 29, 2024
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) அடுத்த வாரத்திற்குள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் தாக்கூர்,"அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள், CAA நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இது எனது உத்தரவாதம்" என்றார்.

    ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும், ஒரு வாரத்திற்குள் CAA அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற முந்தைய மக்களவைத் தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில், சிஏஏ அமல் என்பது பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    சிஏஏ

    குடியுரிமை (திருத்த) சட்டம் என்றால் என்ன?

    CAA என்பது பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியாவிற்கு வந்த பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத சிறுபான்மை அகதிகளான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு, இது இந்திய குடியுரிமை வழங்குகிறது.

    இந்த திருத்த சட்டம், 2019 டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    உள்துறை அமைச்சகத்தின் 2021-22 ஆண்டு அறிக்கைப்படி, ஏப்ரல் 1, 2021 மற்றும் டிசம்பர் 31, 2021க்கு இடையில், 1,414 முஸ்லீம் அல்லாத சிறுபான்மை வெளிநாட்டினருக்கு குடியுரிமைச் சட்டம், 1955 இன் கீழ், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

    ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் மற்றும் உள்துறைச் செயலாளர்கள் இந்தியக் குடியுரிமை வழங்க அதிகாரம் பெற்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாஜக

    தெலுங்கானா அரசியல் தலைவர் ஒவைசியின் பதவியேற்பை பாஜக புறக்கணித்ததால் பரபரப்பு  தெலுங்கானா
    சத்தீஸ்கர் முதல்வர் ஆகிறார் பாஜக தலைவர் விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர்
    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நாடாளுமன்றம்
    மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு மத்திய பிரதேசம்

    மத்திய அரசு

    சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள்  சட்டம் பேசுவோம்
    ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரீனா கைஃப், ஆலியா பட்டை தொடர்ந்து டீப்ஃபேக்கில் சிக்கிய பிரியங்கா சோப்ரா டீப்ஃபேக்
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு கனடா
    ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025