NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது

    அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 16, 2024
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் இறந்து கிடந்த இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத்தின் உடல், ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.

    கிளீவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முதுகலைப் பட்டம் படிக்க அவர் 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றதாகவும், மார்ச் 7 முதல் அர்பத் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக ஏப்ரல் மாதம், அர்பத்தின் தந்தை, தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

    ஹைதராபாத்தை சேர்ந்த அப்துல் முகமது என்ற 25 வயது இளைஞர், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியேறினார்.

    அமெரிக்கா

    ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 

    கடந்த மார்ச் 7ஆம் தேதி முதல் அப்துல் முகமது தங்களுடன் பேசவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் அப்துலின் தந்தையான முகமது சலீமுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.

    அந்த அழைப்பின் மூலம், கிளீவ்லேண்டில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களால் அவர்களது மகன் கடத்தப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

    மேலும், அப்துல் முகமதை விடுவிக்க வேண்டும் என்றால், $1200 டாலர்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டி இருக்கின்றனர்.

    மேலும், பணம் தர மறுத்தால் மாணவரின் சிறுநீரகத்தை மாஃபியாவுக்கு விற்று விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் முகமது அப்துல் அர்பாத் சடலமாக மீட்கப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஹைதராபாத்

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    அமெரிக்கா

    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு காவல்துறை
    நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் ஒடிசியஸ்  விண்வெளி
    ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு இந்தியா
    தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்  உலகம்

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025