NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை 
    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை

    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை 

    எழுதியவர் Nivetha P
    Jun 19, 2023
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மாவட்டம் சோலையழகுபுரம் பகுதியில் வசித்து வரும் ஒருவர் மதிய உணவிற்கு, ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலுள்ள உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளார்.

    அதனை வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட பிரித்த பொழுது, சாப்பாட்டில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடந்துள்ளது.

    அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே அந்த உணவகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் இது குறித்து கூறி கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரம் பெரும் வாக்குவாதமாக மாறியதாக, அங்கிருந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.

    இதனையடுத்து அந்த பாதிக்கப்பட்ட நபர், இந்த விவகாரம் குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார் என்று தெரிகிறது.

    அதிகாரிகள் சோதனை 

    விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள் 

    அந்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று உணவினை சோதனை செய்துள்ளனர்.

    அதனையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

    மேலும் இது குறித்து மதுரை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது, "பார்சல் உணவில் பிளேடு இருந்தது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தோம்".

    "அந்த ஆய்வின் பொழுது, உணவில் பிளேடு இருந்தது குறித்து விளக்கமும் கேட்டோம்".

    "தொடர்ந்து, அந்த உணவகத்தில் உரிய பராமரிப்புகள் ஏதும் இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது".

    "இதன் காரணமாகவே உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது".

    "அதே போல் அடுத்த 14 நாட்களுக்குள் உணவகத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    உணவு பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மதுரை

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு தூத்துக்குடி
    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி டெல்லி
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு சென்னை
    மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை தமிழ்நாடு

    உணவு பாதுகாப்பு துறை

    உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: ஆண்டுதோறும் 10ல் ஒருவர் பலி!  உலக உணவு பாதுகாப்பு தினம்
    வயிற்றுக்கு தீங்கு மற்றும் நோவு விளைவிக்கும் சில உணவுகள்  உலக உணவு பாதுகாப்பு தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025