Page Loader
ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் குறைந்தது: தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது பெரும்பான்மைக்கு கீழே உள்ளது

ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் குறைந்தது: தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது பெரும்பான்மைக்கு கீழே உள்ளது

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2024
05:06 pm

செய்தி முன்னோட்டம்

ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகிய நான்கு நியமன உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் குறைந்துள்ளது. இதன் விளைவாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) எண்ணிக்கை 101 ஆகக் குறைந்துள்ளது. 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவின் தற்போதைய பெரும்பான்மை 113 ஆகும். ராஜ்யசபாவில் தற்போது 19 காலியிடங்களுடன் 225 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸிடம் 26 இடங்களும், திரிணாமுல் காங்கிரஸிடம் 13 இடங்களும், ஆம் ஆத்மி கட்சி மற்றும் திமுகவிடம் தலா 10 இடங்களும் உள்ளன. எனவே, 87 இடங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இந்தியா 

பாஜக அரசு இனி மசோதாக்களை எப்படி நிறைவேற்றும்?

மீதமுள்ள இடங்களை அணிசேரா கட்சிகள், நியமன எம்.பி.க்கள் மற்றும் சுயேச்சைகள் பெற்றுள்ளனர். ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசாங்கம் தற்போது தமிழ்நாட்டின் அதிமுக மற்றும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற NDA அல்லாத கட்சிகளை நம்பியுள்ளது. பாஜக-என்டிஏ கட்சி எம்பிக்களின் 15 வாக்குகள் அரசுக்கு கிடைத்தாலும், மசோதாக்களை நிறைவேற்ற குறைந்தபட்சம் 13 கூடுதல்வாக்குகள் பாஜக அரசுக்கு தேவைப்படும். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (11) மற்றும் அதிமுக (4) ஆகிய கட்சிகளுடன் பாஜகவுக்கு கூட்டணி இல்லையென்றாலும், அவைகளுக்கு இடையே ஒரு இறுக்கமான உறவு இருப்பதால், அவை சாத்தியமான கூட்டணிக் கட்சிகளாகக் காணப்படுகின்றன.