NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது 

    மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2024
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது

    அரபிந்தோ பார்மா நிறுவனம் வாங்கிய ரூ.52 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களில் பாஜக பெரும் பங்கைப் பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நவம்பர் 2022இல் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு அதற்கு அடுத்த ஆண்டு அப்ரூவராக மாறிய சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் இந்த பத்திரங்களை வாங்கியுள்ளது.

    இதே வழக்கில் தான் தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யட்டுள்ளார்.

    ஏப்ரல் 2021 முதல் நவம்பர் 2023க்கு இடையிலான காலகட்டத்தில், அரபிந்தோ பார்மா ரூ.52 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

    டெல்லி 

    சரத் ரெட்டி கைது செய்யப்பட்டவுடன் ரூ.5 கோடியை பெற்ற பாஜக 

    இந்த பத்திரங்களில் 66 சதவீதம் பாஜகவுக்கு அனுப்பப்பட்டதாகவும், 29 சதவீதம் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்)கட்சிக்கு அனுப்பப்பட்டதாகவும், எஞ்சிய தொகை தெலுங்கு தேசம் கட்சிக்கு(டிடிபி) அனுப்பப்பட்டதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

    2022-ல் சரத் ரெட்டி கைது செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு அரபிந்தோ பார்மா நிறுவனம் ரூ.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

    நவம்பர் 10, 2022-ல் சரத் ரெட்டி கைது செய்யப்பட்டார். ரூ.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரபிந்தோ பார்மா நிறுவனம் நவம்பர் 15, 2022-ல் வாங்கி இருக்கிறது.

    அப்படி அரபிந்தோ பார்மா நன்கொடையாக அளித்த ரூ.5 கோடி மதிப்பிலான பத்திரங்களை நவம்பர் 21, 2022 அன்று பாஜக மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    தேர்தல் பத்திரங்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பாஜக

    டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி
    '1,000 ஆண்டுகளுக்கு ராம ராஜ்ஜியம்': ராமர் கோவில் தீர்மானத்தை நிறைவேற்றியது பாஜக  அயோத்தி
    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு சண்டிகர்
    கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம் கர்நாடகா

    தேர்தல் பத்திரங்கள்

    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தேர்தல்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல்
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் கோவை
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025