NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு
    இந்த சுங்க கட்டண உயர்வை பலரும் விமரித்து வருகின்றனர்.

    பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Jun 14, 2023
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI), பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையின் சுங்கக் கட்டணத்தை 22 சதவீதம் உயர்த்தியுள்ளது.

    இந்த கட்டண உயர்வு ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதற்கு இணையவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கார்கள்/ஜீப்கள்/வேன்களில் ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.135ல் இருந்து ரூ.165ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இருவழி பயணத்திற்கான சுங்க கட்டணம் ரூ.205ல் இருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது.

    அதே போல், பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.460ல் இருந்து ரூ.565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பேருந்துகள் மற்றும் லாரிகள் வந்துவிட்டு திரும்புவதற்கான சுங்க கட்டணம் ரூ.690ல் இருந்து ரூ.850 ஆக உயர்ந்துள்ளது.

    தப்பிவிடப்

     இந்த சுங்க கட்டண உயர்வை பலரும்  விமரித்து வருகின்றனர்

    பெங்களூர் - மைசூர் விரைவுச்சாலையின் இரண்டாவது பாதை திறக்கப்பட்ட பிறகு, சுங்க கட்டணம் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    118 கிமீ நீளம் கொண்ட பெங்களூர்- மைசூர் விரைவுச் சாலை ரூ.8,408 கோடி செலவில் கட்டப்பட்டு, மார்ச் 12ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த விரைவுச்சாலை பெங்களூர் மற்றும் மைசூர் இடையேயான பயண நேரத்தை 3.5 மணிநேரத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரமாக குறைத்தது.

    இந்த சுங்க கட்டண உயர்வை பலரும் விமரித்து வருகின்றனர்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ட்விட்டர்வாசியான பிரசன்னா பிஎன், "பெங்களூரு மைசூர் விரைவுச்சாலையின் கட்டணத்தை ஒரு காலாண்டிற்குள் ஏன் உயர்த்துகிறார்கள்! இது எப்படி சாத்தியப்படும்?" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பெங்களூர்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இந்தியா

    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1 வரலாற்று நிகழ்வு
    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2 இந்திரா காந்தி
    இந்தியாவில் 35% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக தகவல்  சென்னை
    55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம்  இந்திய ரயில்வே

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025