NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை!
    கடந்த நிதியாண்டில் கண்டறியப்பட்ட வங்கி மோசடிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

    கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 31, 2023
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நிதியாண்டில் (2022-2023) கண்டறியப்பட்ட வங்கி மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    அந்த அறிக்கையில் இதற்கு முந்தைய நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் கண்டறியப்பட்ட வங்கி மோசடிகளின் அளவு உயர்ந்திருப்பதாகவும், ஆனால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு பாதியாகக் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    அதாவது, கடந்த நிதியாண்டில் 13,530 மோசடி செயல்களில் ரூ.30,252 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால், இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் (2021-2022) 9,097 மோசடி செயல்களின் மூலம் ரூ.59,819 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

    அதற்கும் முந்தைய நிதியாண்டான 2020-2021 நிதியாண்டில் 7,338 மோசடி செயல்களின் மூலம் ரூ.1,32,389 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ரிசர்வ் வங்கி

    குறையும் மோசடி மதிப்பு: 

    2020-21 நிதியாண்டை விட 2021-22 நிதியாண்டில் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 55% குறைந்திருந்ததாகவும், 2021-22 நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 49% குறைந்திருப்பதாகவும் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    சிறு மதிப்பிலான நிறைய டிஜிட்டல் மோசடிகள் நடைபெற்றதாகவும், குறைந்த அளவிலான அதிக மதிப்பு கொண்ட கடன் மோசடிகள் நடைபெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    கடந்த நிதியாண்டில் கண்டறியப்பட்ட மோசடிகளில் ரூ.21,125 கோடி மதிப்பிலான 3,405 மோசடிகள் பொதுத்துறை வங்கிகளிலும், ரூ.8,727 கோடி மதிப்பிலான 8,932 மோசடிகள் தனியார் வங்கிகளிலும் நடைபெற்றிருக்கின்றன.

    இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது மோசடி செய்யப்பட்ட மதிப்பு தானே தவிர, வங்கிகள் இழந்த மதிப்பு அல்ல என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர்  பெங்களூர்
    ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  ரயில்கள்
    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025