NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் 
    லுஃப்தான்சா விமானம் அதன் டயர்கள் குளிர்ந்தவுடன் தாய்லாந்திற்கு மீண்டும் புறப்படும்

    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    03:47 pm

    செய்தி முன்னோட்டம்

    விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

    லுஃப்தான்சா விமானம்-எண் LH772, முனிச்சிலிருந்து(ஜெர்மனி) பாங்காக்(தாய்லாந்து) நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

    அந்த விமானத்தில் பயணித்த ஒரு ஜெர்மனியருக்கும் அவரது தாய்லாந்து மனைவிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது, அவரது மனைவி, தன் கணவரின் நடத்தையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விமானியின் உதவியை நாடினார்.

    இதனையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை எச்சரித்த விமானிகள், முதலில் பாகிஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரினர். ஆனால் அது மறுக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க விமானிகள் அனுமதி கேட்டனர்.

    டவ்க்ஹ்ஜ்க

    ஜெர்மன் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ள இந்திய அதிகாரிகள் 

    அந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், தகராறு செய்த கணவர் அங்கிருந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ள நிலையில், அந்த நபர் விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

    டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை-CISF அதிகாரிகள் இன்னும் சம்பவ இடத்தில் உள்ளனர்.

    அந்த நபரை இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்க வேண்டுமா அல்லது ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப வேண்டுமா என்பது குறித்து அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர்.

    லுஃப்தான்சா விமானம் அதன் டயர்கள் குளிர்ந்தவுடன் தாய்லாந்திற்கு மீண்டும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    தாய்லாந்து
    ஜெர்மனி
    விமானம்

    சமீபத்திய

    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி

    டெல்லி

    நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்  கனடா
    நவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி  ஆம் ஆத்மி
    டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்
    போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் காற்றை விட 12 மடங்கு மோசமானது டெல்லியின் காற்று மாசு  காற்று மாசுபாடு

    தாய்லாந்து

    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  தமிழக அரசு
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? உலக செய்திகள்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் தமிழ்நாடு
    தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தமிழ் திரைப்படங்கள்

    ஜெர்மனி

    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர் யுபிஐ
    அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்

    விமானம்

    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  இந்தியா
    இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு இந்தியா
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்  இந்தியா
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025