NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆசிரியராக தொடங்கி, அம்மாவாக மாறிய பங்காரு அடிகளார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிரியராக தொடங்கி, அம்மாவாக மாறிய பங்காரு அடிகளார்
    மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்

    ஆசிரியராக தொடங்கி, அம்மாவாக மாறிய பங்காரு அடிகளார்

    எழுதியவர் Nivetha P
    திருத்தியவர் Venkatalakshmi V
    Oct 19, 2023
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    மேல்மருவத்தூர் என்றாலே அது ஆதிபராசக்தி கோவில் என்றாகி விட்டது.

    அந்த கோவிலின் பிரசித்திக்கு முக்கிய காரணம் பங்காரு அடிகளார்.

    'அம்மா' என்று அழைக்கப்படும் இவர், தன்னுடைய ஆரம்ப காலத்தில் பள்ளி ஆசிரியராக இருந்தவர்.

    உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் பங்காரு அடிகளாரின் இயற்பெயர் சுப்பிரமணி.

    1941 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் பிறந்த இவர், செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில், ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்.

    அதனை தொடர்ந்து சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

    card 2

    சுப்பிரமணி, 'அம்மா'-வாக மாறினார்

    1966 ஆம் ஆண்டு அவர்கள் வசிக்கும் இடமருகே வீசிய புயல் காற்றால், அவர் வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்தின் அடியில் இருந்து ஒரு சுயம்பு உருவானதாக சொல்லப்படுகிறது.

    அதையே கோயிலாக நிர்மாணித்தார் சுப்பிரமணி என்கிற பங்காரு அடிகளார்.

    அதன்பின்னர், உள்ளூர் மக்களுக்கு குறி சொல்லி வந்த அடிகளாரின் புகழ் மெதுவாக சுற்றுவட்டங்களில் பரவ ஆரம்பித்தது.

    பின்னர், 1970 களில் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து தான், ஆதிபராசக்தியின் அம்சம் என கூறினார். அதன் பின்னரே, சுப்பிரமணி என்கிற பங்காரு அடிகளார், பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டார்.

    card 3

    அறக்கட்டளைகளை நிறுவிய பங்காரு அடிகளார்

    தமிழகம் எங்கும் செவ்வாடை பக்தர்கள், இவரின் அருளாசி கிடைக்க, மேல்மருவத்தூர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

    அதற்கேற்ப கோவிலின் வளர்ச்சிக்காக நன்கொடைகளை குவிந்தன. பங்காரு அடிகளார் இந்த கொடைகள் மூலம், அறக்கட்டளையை நிறுவி, பல கல்வி நிலையங்களும், மருத்துவமனைகளையும் கட்டியுள்ளார்.

    கடந்த சில காலம் முன்னர் வரிஏய்ப்பு செய்ததாக இந்த அறக்கட்டளையில் அதிகாரிகள் சோதனை செய்தது, அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    85 வயதான பங்காரு அடிகளார், இன்று மாரடைப்பால் காலமானார்.

    இரு ஆண்டுகளுக்கு முன்னரே, தான் நிறுவிய சித்தர் பீடம் அருகே தனக்கு சமாதி கட்டி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செங்கல்பட்டு
    ஆன்மீகம்
    விருது

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  கர்ப்பம்
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    ஆன்மீகம்

    திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள் உலகம்
    மதுரை அழகர் கோயில் ஆடித்தேரோட்டம் மதுரை
    காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா அமித்ஷா

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025