NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம்
    அட்டாரி-வாகா எல்லை retreat இன்று முதல் மீண்டும் தொடக்கம்

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 20, 2025
    02:23 pm

    செய்தி முன்னோட்டம்

    போர் பதட்டத்தால் 12 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மே 7 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதட்ட சூழ்நிலையால், அட்டாரி-வாகா எல்லை தற்காலிகமாக மூடப்பட்டு, மே 8 ஆம் தேதி முதல் கொடியிறக்க விழாவும் இடைநிறுத்தப்பட்டது.

    இதனால், நாள்தோறும் நடைபெறும் பாரம்பரிய விழாவை காண வந்த பொதுமக்கள் திரும்ப அனுப்பப்பட்டனர்.

    இந்நிலையில், பாதுகாப்பு சூழ்நிலைகள் சீரடைந்ததை அடுத்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அட்டாரி-வாகா எல்லை மற்றும் பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையில் இன்று முதல் விழா மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விதிமுறைகள்

    எச்சரிக்கை காரணமாக விதிமுறைகளில் மாற்றங்கள் அறிவிப்பு

    விழா நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், எச்சரிக்கைக் காரணங்களால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    நிகழ்வின் போது பொதுமக்கள் மற்றும் இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் வழக்கம்போல் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

    மேலும், எல்லை வாயில்கள் மூடப்பட்ட நிலையில் விழா நடைபெறும். இந்த கொடியிறக்க விழா 1959ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு முதன்முறையாக 12 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்ட இந்த விழா, இன்று மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்தியா vs பாகிஸ்தான்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    இந்தியா

    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது சுற்றுலா
    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்

    இந்தியா vs பாகிஸ்தான்

    வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? ஷுப்மன் கில்
    Sports Round Up : சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம்; தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    ஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி ஜஸ்ப்ரீத் பும்ரா
    INDvsPAK போட்டிக்காக லகான் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனருடன் கைகோர்த்த பிசிசிஐ ஒருநாள் உலகக்கோப்பை

    பாகிஸ்தான்

    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட் உளவுத்துறை
    'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு இந்தியா
    பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன  இண்டிகோ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025