NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி 
    'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி

    'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி 

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    அசாம் மாநிலம், நகோன் மாவட்டத்தில் மொரிகொலாங் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜூமொனி ரூபா(30).

    இவர் மோசடி வழக்கு ஒன்றில் தனது கணவரை கைது செய்தவர்.

    தொடர்ந்து அவர் குற்றவாளிகள் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து 'பெண் சிங்கம்' என்னும் பெயரினை பெற்றார்.

    இவர் குற்றவாளிகளை கடுமையாக கையாண்டாலும் அவர்களிடம் மிரட்டி பணம் பறிப்பார் என்றும் கூறப்படுகிறது.

    இதனால் அவரை 'தபாங் போலீஸ்' என்றும் அழைப்பர். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து அவர் தனது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் மே.,16(நேற்று) அதிகாலை 2.30 மணியளவில் தனது காரில் சஹ்குயா என்னும் கிராமப்பகுதியில் உள்ள சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார்.

    விபத்து

    தப்பியோடிய லாரி ட்ரைவரை தேடும் போலீசார் 

    அப்போது வேகமாக அதே சாலையில் வந்த லாரி ஒன்று ரூபாவின் கார் மீது மிக வேகமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார்கள்.

    அதன் பின்னர் அது ஜூமொனி ரூபா தான் என்று உறுதி செய்துள்ளார்கள்.

    மேலும் ரூபா காரில் மோதிய லாரி உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்ததாகும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் போலீசார் தற்போது தப்பியோடிய லாரி ட்ரைவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அசாம்
    கார்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    கார்

    டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு! கார் உரிமையாளர்கள்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் மஹிந்திரா
    உலக புகழ் பெற்ற புகாட்டி காரின் பெயிண்ட் அடிக்கும் ரகசியம் என்ன தெரியுமா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வட இந்திய பிரபலங்கள்! கார் உரிமையாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025