NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி
    குறிப்பிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் கூடாரங்களை அரசாங்கம் அமைத்துள்ளது.

    ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி

    எழுதியவர் Sindhuja SM
    Jul 15, 2023
    03:56 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் உள்ள ஒரு தடுப்பணையின் வடிகால் ரெகுலேட்டர் மற்றும் மதகுகள் கடும் வெள்ளத்தால் சேதமடைந்ததால், வெள்ள நீர் தேசிய தலைநகரின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது.

    இதனையடுத்து, டெல்லியில் ஏற்பட்டிருக்கிருக்கும் இந்த வெள்ள நெருக்கடியை தீர்க்க இந்திய ராணுவமும் கடற்படையும் போராடி வருகின்றன.

    ஜூலை 13ஆம் தேதி அன்று இரவு யமுனை நதியின் நீர்மட்டம் அபாயக் கட்டத்திற்கு மேல் உயர்ந்ததால், இந்திய ராணுவத்தின் உதவியை டெல்லி நிர்வாகம் கோரியது.

    அதன்பிறகு, ராணுவத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து டெல்லி தலைமைச் செயலாளரும் ராணுவ அதிகாரிகளும் விவாதித்தனர்.

    ஐடிஓ தடுப்பணையின் அடைப்புக் கதவுகளைத் திறக்க இந்திய கடற்படை தங்களுக்கு உதவி வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.

    ஹுயய்

    வீடுகளை இழந்து உணவு, உடை இல்லாமல் தவிக்கும் டெல்லி மக்கள் 

    ஐடிஓ தடுப்பணையில் உள்ள 32 மதகுகளில் ஐந்து மதகுகள் சேதமடைந்துள்ளன.

    ஏறக்குறைய 20 மணிநேர இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு, தடுப்பணையின் ஒரே ஒரு மதகு நேற்று இரவு திறக்கப்பட்டது.

    இந்த பிரச்சனைகளை சரி செய்ய இந்திய ராணுவமும் கடற்படையும் போராடி வருகின்றன.

    இதற்கிடையில், யமுனை நதிக்கரையில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான டெல்லி வாசிகளின் வீடுகளும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு கடுமையான உணவு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் கூடாரங்களை அரசாங்கம் அமைத்துள்ளது.

    இருப்பினும், பலருக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது.

    டெல்லியின் தெருக்களில், வீடுகளை இழந்த குடும்பங்கள் தண்ணீர் முதல் உணவு வரை அனைத்திற்கும் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    இந்திய ராணுவம்
    கடற்படை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    டெல்லி

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்? சன் பிக்சர்ஸ்
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா

    இந்தியா

    இந்த காலகட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் இந்தியர்கள்  உலகம்
    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ? சந்திரன்
    மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் மின்னொளி - தொல்லியல்துறை அறிவிப்பு தொல்லியல் துறை
    இந்தியாவில் ஒரே நாளில் 46 கொரோனா பாதிப்பு கொரோனா

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025