NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது 
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது 
    இந்தியா

    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது 

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2023 | 05:24 pm 1 நிமிட வாசிப்பு
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது 
    மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக இன மோதல்களும் வன்முறைகளும் பதிவாகி கொண்டிருக்கிறது.

    மணிப்பூரில் பல நாட்களாக வன்முறை எதுவும் இல்லாமல் அமைதி நிலவி வந்த நிலையில், இன்று(மே 22) மதியம் மீண்டும் அங்கு புதிய மோதல்கள் பதிவாகி உள்ளன. இதனையடுத்து, மணிப்பூரில் இராணுவ வீரர்களும் துணை ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத் தலைநகர் இம்பாலின் நியூ செக்கன் பகுதியில் மெய்த்தே மற்றும் குக்கி சமூகங்கள் மோதிக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உள்ளூர் சந்தையில் ஏதோ இடத்திற்காக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதல்களின் போது, அப்பகுதியில் தீ வைக்கப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக இன மோதல்களும் வன்முறைகளும் பதிவாகி கொண்டிருக்கிறது.

    ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி

    மே 3ஆம் தேதி, மணிப்பூரில் சுமார் 30 பழங்குடியின குழுக்களுக்கும், பழங்குடியினரல்லாத மெய்த்தே இனத்தவருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. ஒரு வாரம் நீடித்த இந்த வன்முறையால் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் எரிக்கப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு ஏற்பாடு செய்த முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று கூறி இந்த வன்முறை போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சிறுபான்மை மலைவாழ் சமூகத் தலைவர்கள், மெய்தே சமூகம் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது நியாயமற்றது என்றும் கூறி இருந்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    கலவரம்

    இந்தியா

    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ் மத்திய அரசு
    மகளிர் ஹாக்கி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா ஹாக்கி போட்டி
    '2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர்  ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் ஒரே நாளில் 473 கொரோனா பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு கொரோனா

    கலவரம்

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023