NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது 
    மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக இன மோதல்களும் வன்முறைகளும் பதிவாகி கொண்டிருக்கிறது.

    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது 

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2023
    05:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் பல நாட்களாக வன்முறை எதுவும் இல்லாமல் அமைதி நிலவி வந்த நிலையில், இன்று(மே 22) மதியம் மீண்டும் அங்கு புதிய மோதல்கள் பதிவாகி உள்ளன.

    இதனையடுத்து, மணிப்பூரில் இராணுவ வீரர்களும் துணை ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அம்மாநிலத் தலைநகர் இம்பாலின் நியூ செக்கன் பகுதியில் மெய்த்தே மற்றும் குக்கி சமூகங்கள் மோதிக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    உள்ளூர் சந்தையில் ஏதோ இடத்திற்காக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மோதல்களின் போது, அப்பகுதியில் தீ வைக்கப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக இன மோதல்களும் வன்முறைகளும் பதிவாகி கொண்டிருக்கிறது.

    DETAILS

    ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி

    மே 3ஆம் தேதி, மணிப்பூரில் சுமார் 30 பழங்குடியின குழுக்களுக்கும், பழங்குடியினரல்லாத மெய்த்தே இனத்தவருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது.

    ஒரு வாரம் நீடித்த இந்த வன்முறையால் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் எரிக்கப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு ஏற்பாடு செய்த முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று கூறி இந்த வன்முறை போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

    சிறுபான்மை மலைவாழ் சமூகத் தலைவர்கள், மெய்தே சமூகம் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது நியாயமற்றது என்றும் கூறி இருந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கலவரம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!  போக்குவரத்து விதிகள்
    சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் டெல்லி
    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி சென்னை
    விளம்பர விதிகளை மீறியதாக புகார்! டாப் 5 பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி! எம்எஸ் தோனி

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025