NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திருப்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திருப்பம்
    இந்த வழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்

    கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திருப்பம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 19, 2024
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் வழக்கில் தினசரி பல திருப்பங்களும், கைதுகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த கொலை ஒரு பழிக்குப்பழி வாங்கும் கொலை தான் என காவல்துறையினர் தெரிவித்து வந்தாலும், இந்த வழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதைப்பார்க்கும் போது, இந்த பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கை அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு உள்ளதென்பதை காட்டுகிறது.

    அதோடு இதில் ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டும் சம்மந்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த சம்பவத்தில் கைதானவர்களையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும் கட்சி நிர்வாகம் நீக்கி வருவது இந்த கொலைக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இருக்கு என்பதை உறுதி செய்கிறது.

    பழிக்குப்பழி

    யாரெல்லாம் சந்தேகத்தின் பிடியில் இருப்பது?

    ஆரம்பகட்டத்தில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை என கருதப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை கொலை நடந்த அன்றைய இரவே காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக பெண் வழக்கறிஞர்கள் மலர்கொடி ஹரிஹரன் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

    அதோடு, வடசென்னை பா.ஜ.க. பெண் பிரமுகர் அஞ்சலையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்ம்ஸ்ட்ராங்கை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்ததாகவும், இவர்கள் கூட்டு சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    காவல்துறை
    காவல்துறை
    கைது

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கொலை

    மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது மத்திய பிரதேசம்
    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி செங்கல்பட்டு
    தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது  கைது
    $5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம்  அமெரிக்கா

    காவல்துறை

    பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது தமிழக காவல்துறை
    காஞ்சிபுரத்தில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி அதை 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற BMW கார் காஞ்சிபுரம்
    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    அவதூறு சர்ச்சை: ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார் அதிமுக

    காவல்துறை

    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா
    கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஜார்கண்ட்
    நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி
    மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை

    கைது

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை தமிழக காவல்துறை
    உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம் பாலியல் வன்கொடுமை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025