NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம்
    ஆய்வு முடிந்த பிறகும், ஆய்வறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறை கால தாமதம் செய்து வருகிறது.

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 30, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தர பிரதேசம்: ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் மேலும் 10 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

    ஒரு மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு நான்காவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி ஒரு பழங்கால இந்து கோவிலின் மேல் கட்டப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இந்நிலையில், ஐந்து இந்துப் பெண்கள் தங்களுக்கும் ஞானவாபி மசூதியில் வழிபடுவதற்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    ட்ஜ்வ்ல்னா

    தொடர்ந்து கால தாமதம் செய்து வரும் தொல்லியல் துறை 

    இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், மசூதியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ASIக்கு உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த எதிர்ப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தொல்லியல் துறை ஞானவாபி மசூதியில் தனது ஆய்வை தொடங்கியது.

    ஆனால், ஆய்வு முடிந்த பிறகும், ஆய்வறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறை கால தாமதம் செய்து வருகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன்பு, ஞானவாபி மசூதியின் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க, மேலும் மூன்று வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் ASI கோரி இருந்தது.

    இந்நிலையில், 21 நாட்களுக்கு கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்த நீதிமன்றம், மேலும் 10 நாட்களுக்கு மட்டும் நீட்டித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா? பாகிஸ்தான்
    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  கொலை
    ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி  உயர்நீதிமன்றம்
    உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல் இந்தியா

    இந்தியா

    ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா நடிகர்
    ஒரே வகுப்பில் படிக்கும் மாணவனை காம்பஸால் 108 முறை குத்திய 4ஆம் வகுப்பு சிறுவர்கள்  குற்றவியல் நிகழ்வு
    மணிப்பூர்: தேசிய நெடுஞ்சாலை முற்றுகையை தற்காலிகமாக நிறுத்தியது குக்கி சமூக குழு மணிப்பூர்
    தமிழகத்தில் பரவும் ஃப்ளூ காய்ச்சல் - பரவலை தடுக்க மருத்துவ அறிவுறுத்தல்கள் வெளியீடு ஃப்ளூ காய்ச்சல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025