NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு 
    இருபது சிறுத்தைகளில் இரண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உயிரிழந்தன.

    மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 09, 2023
    06:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தக்ஷா என்ற பெண் சிறுத்தை மற்ற சிறுத்தைகளுடன் ஏற்பட்ட சண்டையால் இன்று(மே 9) உயிரிழந்தது.

    தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று உயிரிழப்பது, கடந்த 40 நாட்களில் இது மூன்றாவது முறையாகும்.

    நாட்டு சிறுத்தை இனங்களை இந்தியாவில் பெருக்குவதற்காக, இருபது சிறுத்தைகள் வெளிநாடுகளில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த இருபது சிறுத்தைகளில் இரண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உயிரிழந்தன.

    மார்ச் மாதம் உயிரிழந்த சாஷா எனும் சிறுத்தை, இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்தே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    details

    ஜூன் மாதத்திற்கு முன் நான்கு சிறுத்தைகள் விடுதலை செய்யப்படும்: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

    ஏப்ரல் மாதம், இரண்டாவது சிறுத்தையான உதய், தேசிய பூங்காவில் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது உயிரிழந்தது.

    ஜூன் மாதம் பருவமழை தொடங்குவதற்கு முன், ஐந்து சிறுத்தைகள்(மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் சிறுத்தைகள்) குனோ தேசிய பூங்காவில்(KNP) உள்ள பழக்கவழக்க முகாம்களில் இருந்து சுதந்திரமான சூழ்நிலையில் விடுவிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று தெரிவித்திருந்தது.

    இதுவரை, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளில் நான்கு, வேலியிடப்பட்ட பழக்கவழக்க முகாம்களில் இருந்து சுதந்திரமான சூழ்நிலைக்குள் விடுவிக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவிற்குள் விடுவித்து, சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 3,611 கொரோனா பாதிப்பு: 36 பேர் உயிரிழப்பு கொரோனா
    நாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம்  நீட் தேர்வு
    சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    UPI சேவையை எளிதாக்கும் UPI Lite வசதி.. போன்பேயிலும் அறிமுகமானது! ஸ்மார்ட்போன்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து விமானப்படை
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' பாஜக
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025