NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம்
    உடல்நிலை காரணமாக நாயுடுவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 31, 2023
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    திறன் மேம்பாட்டு கழக வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    உடல்நிலை காரணமாக நாயுடுவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடுவை, கடந்த செப் 9ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினர்(சிஐடி) கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

    இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை(FIR) 2021ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும்.

    2014ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது இந்த ஊழல் நடந்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்

    Andhra Pradesh High Court grants interim bail to Former Andhra Pradesh CM and TDP chief N Chandrababu Naidu for four weeks, in the skill development case: High Court Advocate Sunkara Krishnamurthy pic.twitter.com/AxXpjLQ8be

    — ANI (@ANI) October 31, 2023

    ட்ஜ்வ்க்க்

    கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் 

    மேலும், இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு 1வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    2014ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் சீமென்ஸ் செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் கிளஸ்டர்கள் நிறுவப்படும் போது, 250 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், அந்த நிதி மோசடியின் பின்னணியில் சந்திரபாபு நாயுடுவும் மற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் இருப்பதாக சிஐடி தலைவர் என் சஞ்சய் கூறி இருந்தார்.

    இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    கடந்த இரண்டு மாதங்களாக அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆந்திர நீதிமன்றம் அவருக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    இந்தியா

    சமீபத்திய

    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    ஆந்திரா

    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!  ரஜினிகாந்த்
    நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டும் ஆந்திரா இளைஞர்! சமந்தா ரூத் பிரபு
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  சென்னை
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்  தமிழ்நாடு

    இந்தியா

    'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்
    இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு  மலேசியா
    இன்று போலியோ தினம் அனுசரிப்பு - முக்கியத்துவங்கள் மற்றும் அவசியங்கள் என்னென்ன ? போலியோ
    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் 7 பதக்கங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025