NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு போக்குவரத்து துயரம்: MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் நர லோகேஷ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு போக்குவரத்து துயரம்: MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் நர லோகேஷ்
    பெங்களூரு போக்குவரத்து துயரம்

    பெங்களூரு போக்குவரத்து துயரம்: MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் நர லோகேஷ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 24, 2024
    06:50 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், நகரம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளது.

    அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளனர்.

    கர்நாடக அரசும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த மூன்று தசாப்தங்களில் பெங்களூரில் பெய்த கனமழை இதுவாகும். மழையினால் நேற்று எலக்ட்ரானிக் சிட்டி ரோட்டில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித நிகழ்வும் நடந்துள்ளது.

    இந்த நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியுமான (CFO) மோகன்தாஸ் பாய் பெங்களூருவில் போக்குவரத்து மற்றும் பிற உள்கட்டமைப்பு பிரச்சனைகளில் கர்நாடக அரசின் "நடவடிக்கையின்மை"யை சாடியுள்ளார்.

    பதில்

    MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த நர லோகேஷ்

    கர்நாடகாவில் உள்ள குடிமைப் பிரச்சனைகளை கடுமையாக விமர்சிப்பவராக அறியப்படும் பாய், தனது டீவீட்டில், பெங்களூருவில் உள்ள பல MNC நிறுவனங்கள் கடுமையான உள்கட்டமைப்புப் பிரச்சனைகளால், மாநிலத் தலைநகருக்கு வெளியே தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினார்.

    கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், பெங்களூருவாசிகள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளது என்றார்.

    ட்வீட்டிற்கு உடனடியாக பதிலளித்த ஆந்திராவின் தொழில்துறை அமைச்சர் நர லோகேஷ்,"ஆந்திரப் பிரதேசத்திற்கு அனைத்து MNC நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார். "அங்கு முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு புதிய, வணிக நட்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்" என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பாய் ட்வீட்

    Lack of action by @CMofKarnataka @siddaramaiah @DKShivakumar @PriyankKharge on roads, drainage, traffic on ORR is leading to huge anger and is forcing many MNC’s to seriously consider expanding outside City.promises made by CM, DCM repeatedly not upheld,trust down. This is very…

    — Mohandas Pai (@TVMohandasPai) October 21, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    நர லோகேஷ் பதில்

    Namaskaram @TVMohandasPai Sir. With humble regards, I would like to extend an invitation to all MNCs to Andhra Pradesh, where Hon'ble Chief Minister Shri @ncbn Garu has introduced new, business-friendly policies. We view industries as vital stakeholders in our state’s welfare and… https://t.co/roCd8AG3Cu

    — Lokesh Nara (@naralokesh) October 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    ஆந்திரா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல் 2025
    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு

    பெங்களூர்

    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  வெடிகுண்டு மிரட்டல்
    வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பெங்களூரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவரின் வீடியோ வைரல்  இந்தியா
    பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்  குண்டுவெடிப்பு
    பெங்களூரு வீடுகளில் கணினிகளை திருடிய பெண் 24 லேப்டாப்களுடன் சிக்கினார் இந்தியா

    ஆந்திரா

    ஹனுமா விஹாரியின் புகாருக்கு ஆந்திர கிரிக்கெட் அமைப்பு பதில் கிரிக்கெட்
     'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல் ரயில்கள்
    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  சந்திரபாபு நாயுடு
    வாக்காளர் கன்னத்தில் அறைந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ: பதிலுக்கு அடி விழுந்ததால் பரபரப்பு  ஜெகன் மோகன் ரெட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025