NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் இல்லாதவருக்கு இடமில்லை; எதிர்க்கட்சிகள் அச்சத்தை விதைப்பதாக அமித்ஷா குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் இல்லாதவருக்கு இடமில்லை; எதிர்க்கட்சிகள் அச்சத்தை விதைப்பதாக அமித்ஷா குற்றச்சாட்டு
    வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் இல்லாதவருக்கு இடமில்லை என அமித்ஷா விளக்கம்

    வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் இல்லாதவருக்கு இடமில்லை; எதிர்க்கட்சிகள் அச்சத்தை விதைப்பதாக அமித்ஷா குற்றச்சாட்டு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 02, 2025
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 2 ஆம் தேதி மக்களவையில் வக்ஃப் (திருத்த) மசோதா, 2025 க்கு வலுவான ஆதரவைத் தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளை நிராகரித்தார்.

    இந்த மசோதா வக்ஃப் சொத்துக்களை திறம்பட ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியதோடு, அது இஸ்லாமியர்களின் மத நடைமுறைகள் அல்லது நன்கொடை செய்யப்பட்ட சொத்துக்களில் தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

    வக்ஃப் விவகாரங்களில் முஸ்லீம் அல்லாதவர்களைச் சேர்ப்பது குறித்த கவலைகளைக் குறிப்பிட்ட அமித்ஷா, "எந்த இஸ்லாமியர் அல்லாத உறுப்பினரும் வக்ஃபின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள்.

    மத நிறுவனங்களை நிர்வகிக்க முஸ்லீம் அல்லாத ஒருவரை நியமிக்க எந்த ஏற்பாடும் இல்லை, அத்தகைய ஒரு விதியை அறிமுகப்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.

    சிறுபான்மையினர்

    சிறுபான்மையினரிடையே அச்சத்தை விதைப்பதாகக் குற்றச்சாட்டு

    அரசியல் ஆதாயங்களுக்காக சிறுபான்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

    இந்த மசோதா பின்னோக்கிச் செல்லுபடியாகாது என்பதை அமித்ஷா வலியுறுத்தினார்.

    மேலும், வக்ஃப் வாரிய கவுன்சில்கள் மற்றும் வாரியங்கள் 1995 முதல் உள்ளன. வக்ஃப் சொத்துக்களின் சரியான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே திருத்தங்கள் செயல்படுகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

    "இந்தச் சட்டம் நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்கும், அவை மத மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகள் போன்ற அவற்றின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் மட்டுமே நோக்கமாக உள்ளது." என்று அவர் மேலும் கூறினார்.

    ஆட்சேபனைகளுக்கு பதிலளித்த அமித்ஷா, இந்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்ட கட்டமைப்பாகும், மேலும் இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வக்ஃப் வாரியம்
    அமித்ஷா
    மக்களவை
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    வக்ஃப் வாரியம்

    வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவை
    வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் மத்திய அரசு
    வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல் நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு மாநிலங்களவை

    அமித்ஷா

    'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா இந்தியா
    ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமித் ஷாவுக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம் மல்லிகார்ஜுன் கார்கே
    பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு மத்திய அரசு
    '2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா நாடாளுமன்றம்

    மக்களவை

    பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்  பாஜக
    மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்? சபாநாயகர்
    மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும் நாடாளுமன்றம்
    மக்களவை சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அந்த பதவியின் முக்கியத்துவம் என்ன? சபாநாயகர்

    எதிர்க்கட்சிகள்

    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு மத்திய அரசு
    தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை; மம்தா பங்கெடுக்கவில்லை  இந்தியா
    இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு மல்லிகார்ஜுன் கார்கே
    இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025