NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Jun 08, 2023
    09:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிகமாக சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட கிட்டத்தட்ட 65 பேர் தற்போது தங்கள் பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    தங்கள் பணியினை நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்தனர்.

    அதன்பேரில் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் பணியாற்றிய சுகாதார பராமரிப்பு பணியாளர்கள் நலனை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையும்,

    பணி நிரந்தரம் செய்யும் பொழுது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

    ஆம்புலன்ஸ் 

    பணி நிரந்தரம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை 

    மேலும் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பணி நிரந்தரம் செய்யக்கோரி தாங்கள் அளித்த விண்ணப்பங்கள் குறித்து மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்,ஆனால் காலியாகவுள்ள 800ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, தங்களது பணியினை நிரந்தரம் செய்யாமல் காலிப்பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த மனு இன்று(ஜூன்.,8)விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 800 காலி ஓட்டுனர்களுக்கான பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஓட்டுனர்களை பணியிடை நீக்கம் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல் இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி,வழக்கின் விசாரணையினை ஜூலை 28ம்தேதிக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மத்திய அரசு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    தமிழ்நாடு

    சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி  சென்னை
    இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு! ரிசர்வ் வங்கி
    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விருது
    பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர்  பால்வளத்துறை

    மத்திய அரசு

    அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு! ஸ்மார்ட்போன்
    ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு  ராஜஸ்தான்
    டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  இந்தியா
    மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC! மும்பை

    உச்ச நீதிமன்றம்

    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  இந்தியா
    வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் இந்தியா
    ஒரே பாலின உறவுகள் உடல் ரீதியானது மட்டுமல்ல: தலைமை நீதிபதி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025