NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
    இந்தியா

    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    June 08, 2023 | 09:12 pm 0 நிமிட வாசிப்பு
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிகமாக சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட கிட்டத்தட்ட 65 பேர் தற்போது தங்கள் பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தங்கள் பணியினை நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்தனர். அதன்பேரில் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் பணியாற்றிய சுகாதார பராமரிப்பு பணியாளர்கள் நலனை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையும், பணி நிரந்தரம் செய்யும் பொழுது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

    பணி நிரந்தரம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை 

    மேலும் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பணி நிரந்தரம் செய்யக்கோரி தாங்கள் அளித்த விண்ணப்பங்கள் குறித்து மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்,ஆனால் காலியாகவுள்ள 800ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, தங்களது பணியினை நிரந்தரம் செய்யாமல் காலிப்பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று(ஜூன்.,8)விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 800 காலி ஓட்டுனர்களுக்கான பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஓட்டுனர்களை பணியிடை நீக்கம் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி,வழக்கின் விசாரணையினை ஜூலை 28ம்தேதிக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மத்திய அரசு
    உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாடு

    கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை திருவிழா
    தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவு எண்ணிக்கை 66.70 லட்சம்  தமிழக அரசு
    கேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம்  தமிழக அரசு

    மத்திய அரசு

    சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க அனுமதி  தமிழ்நாடு
    விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லி
    அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்! இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு தென்காசி
    ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு  தூத்துக்குடி
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023