NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை 
    அரபிக்கடலில் வீசிய பிபர்ஜாய் புயல் காரணமாக நேற்று மாலை மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2023
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பிபர்ஜோய் புயல் "மிக தீவிர புயலாக"வலுவடைந்துள்ளது. மேலும், இந்த புயல் குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு இடையே வியாழக்கிழமை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைக்கு வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    "கட்ச், ஜாம்நகர், மோர்பி, கிர் சோம்நாத், போர்பந்தர் மற்றும் தேவ்பூமி துவாரகா ஆகிய மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படலாம். மேலும் ஜூன் 13-15ஆம் தேதி வரை பலத்த காற்றுடன்(மணிக்கு 150 கிமீ வேகம்) கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது." என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    குட்ச் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர்.

    detaisl

    மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அவசரச் சூழலையும் சமாளிக்க கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குச் சென்றார்.

    குஜராத்தின் வல்சாத் பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான தித்தால் கடற்கரை, அதிக அலைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அரபிக்கடலில் வீசிய பிபர்ஜாய் புயல் காரணமாக நேற்று மாலை மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டன. மேலும், பல விமானங்கள் தரையிறங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை
    குஜராத்
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை!  சிவகங்கை
    இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்  ஏர் இந்தியா
    'பைபர்ஜாய்' புயலால் கேரள பருவமழை பாதிக்கப்படலாம்: வானிலை ஆய்வு மையம்  கேரளா
    'இந்தியா செல்ல தடையில்லா சான்றிதழ் கிடைக்கல' : அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்! கால்பந்து செய்திகள்

    மும்பை

    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ் இந்தியா
    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி டெல்லி

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேர்தல்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? இந்தியா
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    வானிலை அறிக்கை

    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    'மோக்கா' புயலுக்கு தயாராகுங்கள்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு தமிழ்நாடு
    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை  தமிழ்நாடு
    மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025