NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இரண்டரை மணிநேரம் நாட்டையே கதிகலங்க வைத்த திருச்சி ஏர் இந்தியா விமானம்; 141 பயணிகள் உயிருடன் தப்பியது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டரை மணிநேரம் நாட்டையே கதிகலங்க வைத்த திருச்சி ஏர் இந்தியா விமானம்; 141 பயணிகள் உயிருடன் தப்பியது எப்படி?
    நாட்டையே கதிகலங்க வைத்த Air India Express விமானம்

    இரண்டரை மணிநேரம் நாட்டையே கதிகலங்க வைத்த திருச்சி ஏர் இந்தியா விமானம்; 141 பயணிகள் உயிருடன் தப்பியது எப்படி?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 11, 2024
    10:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சுமார் 141 பயணிகளுடன், திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாயின் சார்ஜாவுக்கு மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

    ஆனால், விமானத்தின் அடிப்பாகத்தில் உள்ள சக்கரம் சரியாக திறக்கவில்லை என கண்டறியப்பட்டது. இயந்திர கோளாறால், விமானம் சார்ஜா செல்லாமல், திருச்சியைச் சுற்றி வட்டமடித்து கொண்டே இருந்தது.

    சுமார் இரண்டு மணிநேரமாக, திருச்சியை சுற்றி வட்டமடித்து கொண்டே இருந்தது விமானம்.

    நாடே அதிர்ச்சியுடன் உறைந்து போய் நின்றிருந்த நேரத்தில், 4255 அடி உயரத்தில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்த பிறகு, விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தரையில் குவிக்கப்பட்டன. இறுதியாக, 8.15 மணிக்கு, எந்த பிரச்சனையுமின்றி, விமானம் தரையிறங்கியது.

    பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்

    எரிபொருளை காலி செய்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம் 

    விமானத்தை தரையிறக்குவது குறித்து நிபுணர்கள் கூறியதன் படி,"சக்கரத்தில் பிரச்சனை ஏற்பட்டால், முன்பக்க அல்லது பின்பக்க சக்கரத்தை வைத்து தரையிறக்கலாம். ஆனால், எரிபொருளை குறைத்து விமானத்தின் எடையை குறைக்க வேண்டும். இதற்கான இரண்டு வழிகள் உள்ளன: விமானம் வட்டமடிக்கும்போது எரிபொருளை காலி செய்யலாம், அல்லது மக்கள் இல்லாத இடங்களில் கீழே பறந்து எரிபொருளை வெளியேற்றலாம்" என்று கூறுகின்றனர்.

    தற்போது அதே போல, ஏர் இந்தியா விமானம், இரண்டரை மணிநேர வட்டமடித்து, எரிபொருளை காலி செய்த பிறகு, பாதுகாப்பாக தரையிறங்கியது; விமானத்தில் இருந்த 141 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அமைச்சர் TRB ராஜாவும் பதிவிட்டிருந்தார்.

    embed

    Twitter Post

    #BREAKING | பத்திரமாக தரையிறங்கியது திருச்சி விமானம்!#SunNews | #Trichy | #AirIndiaExpress pic.twitter.com/ERoSysrnGk— Sun News (@sunnewstamil) October 11, 2024

    embed

    Twitter Post

    Here is #AI613 safely back on the ground 🙏🏾🙏🏾🙏🏾#Trichy https://t.co/eMuxTRT0LZ pic.twitter.com/XKlrabT3xQ— Dr. T R B Rajaa (@TRBRajaa) October 11, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    ஏர் இந்தியா
    விமானம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    திருச்சி

    திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம் ஏர் இந்தியா
    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது  ஆடி

    ஏர் இந்தியா

    விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை  இந்தியா
    'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள் இந்தியா
    நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது இந்தியா
    நடு வானில் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய பயணி  இந்தியா

    விமானம்

    346 பேரைக் கொன்ற 737 MAX விபத்துக்களுக்காக போயிங் மீது வழக்கு தொடரப்படலாம் அமெரிக்கா
    விமான விபத்தில் கொல்லப்பட்ட பிரபல அரசியல்வாதிகள் ஒரு பார்வை விபத்து
    டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் வெளியேற்றம் வெடிகுண்டு மிரட்டல்
    ஏர் இந்தியா விமானம் 20 மணி நேரம் தாமதம், ஏசி இல்லாமல் மயக்கமடைந்த பயணிகள் ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025