NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானம் 20 மணி நேரம் தாமதம், ஏசி இல்லாமல் மயக்கமடைந்த பயணிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர் இந்தியா விமானம் 20 மணி நேரம் தாமதம், ஏசி இல்லாமல் மயக்கமடைந்த பயணிகள்
    AC வேலை செய்யாத காரணத்தால், பயணிகளில் பலரும் மூச்சு முட்டி மயக்கமடைந்தனர்

    ஏர் இந்தியா விமானம் 20 மணி நேரம் தாமதம், ஏசி இல்லாமல் மயக்கமடைந்த பயணிகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 31, 2024
    11:15 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் 20 மணி நேரம் தாமதமானது. முதலில் பயணிகள் விமானத்திற்குள் காத்திருக்க வைக்கப்பட்டனர்.

    அங்கே AC வேலை செய்யாத காரணத்தால், பயணிகளில் பலரும் மூச்சு முட்டி மயக்கமடைந்தனர்.

    வியாழன் மதியம் புறப்பட இருந்த விமானம் முதலில் எட்டு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி வரை தாமதமானது.

    ஏற்கனவே டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசுவதால், வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது.

    அதோடு விமானத்தில் AC வேலை செய்யாததால், பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    பயணிகள் குறை

    'மனிதாபிமானமற்ற செயல்': பயணிகள் சோதனையை விவரிக்கின்றனர்

    X இல் ஒரு இடுகையில், பத்திரிகையாளர் ஸ்வேதா பஞ்ச் "இது மனிதாபிமானமற்ற செயல்" என சம்பவத்தை விவரித்தார்.

    அவர் தனது பதிவில் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை டேக் செய்து, "தனியார்மயமாக்கல் கதை என்றால் அது ஏர் இந்தியாதான்" என்று கூறினார்.

    "பயணிகள் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் விமானத்தில் ஏற வைக்கப்பட்டனர். விமானத்தில் சிலர் மயக்கமடைந்த பிறகு இறக்கிவிடப்பட்டனர்," என்று அவர் மேலும் கூறினார்.

    ஏர் இந்தியா பதில்

    பயனர்கள் குறைகளுக்கு ஏர் இந்தியா பதில்

    ஏர் இந்தியா, "தாமதத்தை நிவர்த்தி செய்ய எங்கள் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பதில் உறுதியாக இருங்கள் மற்றும் உங்கள் தற்போதைய ஆதரவையும், புரிதலையும் பாராட்டுகிறோம். பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க நாங்கள் எங்கள் குழுவை எச்சரித்து வருகிறோம்." என பதில் கூறியுள்ளது.

    பயணிகள் பதிவிட்ட புகைப்படங்களில், குழந்தைகள் உட்பட பயணிகள் பலரும் சோர்வுடன் தரையில் அமர்ந்திருப்பதைக் காட்டியது. இதே போல கடந்த ஜனவரி மாதம் ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சமாளிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, மறுக்கப்பட்ட போர்டிங், விமான ரத்து மற்றும் தாமதங்களைக் கையாள்வதற்கான SOP, மூன்று மணிநேரத்திற்கு மேல் தாமதமான விமானங்களை விமான நிறுவனங்கள் ரத்து செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பயணிகள் அவதி

    If there is a privatisation story that has failed it is @airindia @DGCAIndia AI 183 flight has been delayed for over 8 hours , passengers were made to board the plane without air conditioning, and then deplaned after some people fainted in the flight.This is inhuman! @JM_Scindia pic.twitter.com/86KpaOAbgb

    — Shweta Punj (@shwwetapunj) May 30, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    ஏர் இந்தியா பதில்

    Dear Ms. Punj, we truly regret to note the disruptions. Please be rest assured that our team is actively working to address the delay and appreciate your ongoing support and understanding. We are also alerting our team to provide necessary assistance to the passengers.

    — Air India (@airindia) May 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    விமானம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஏர் இந்தியா

    டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா! சாட்ஜிபிடி
    விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு! விமானம்
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி இந்தியா
    டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஏர் இந்தியா! டாடா

    விமானம்

    இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த் மும்பை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025