NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள்

    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள்

    எழுதியவர் Srinath r
    Dec 27, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவின் பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், கன்னட ஆதரவு குழுக்கள் வன்முறைப் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, மொழி மோதல் அதிகரித்துள்ளது.

    இந்த போராட்டத்தில், மஞ்சள் துண்டு அணிந்த பலர் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள கடைகளின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

    சில இடங்களில் கன்னட குழுக்கள் அவர்களே பெயர் பலகை வைக்க முயன்ற போது, காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது.

    பெங்களூர் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில், குறைந்தது 60% கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற உள்ளாட்சி அமைப்பின் விதியை, உடனடியாக அமல்படுத்த கோரி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    கன்னடத்தில் பெயர் பலகை வைக்க, பிப்ரவரி 28 கடைசி நாள்

    கர்நாடக ரக்ஷனா வேதிகே அமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தை பின், பெங்களூரு உள்ளாட்சி அமைப்பு இந்த விதியை விதித்திருக்கும் நிலையில், வலதுசாரி குழு மொழியை மேன்மைப்படுத்துவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

    பெங்களூர் மாநகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளும், பிப்ரவரி 28ம் தேதிக்கு முன்னர் தங்கள் பெயர் பலகைகளில் குறைந்தது 60% கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என, ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தலைவர் துஷார் கிரி இரண்டு நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார்.

    உத்தரவு பின்பற்றப்படாத பட்சத்தில், வணிக உரிமங்கள் ரத்து உள்ளிட்ட சட்ட நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்திருந்தார்.

    கடந்த அக்டோபர் மாதம், கர்நாடகத்தில் வாழ்பவர்கள் அனைவரும் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா கூறியதற்கு பின்னர், மீண்டும் மொழி பிரச்சனை கிளம்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கர்நாடகா
    இந்தியா
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பெங்களூர்

    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை தமிழ்நாடு
    கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது கன்னட படங்கள்
    பழுதான ஐபோன் 13 மாடலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்ற ஆப்பிள் வாடிக்கையாளர் ஆப்பிள்
    இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க் நோக்கியா

    கர்நாடகா

    காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன காவிரி
    காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு காவிரி
    காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்  தமிழ்நாடு
    அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் சித்தராமையா

    இந்தியா

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    இன்று நடைபெறவிருக்கும் இந்திய மஸ்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் மல்யுத்தம்
    H-1B விசா பைலட் திட்டத்தின் தகுதி, தேதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் வெளியிடப்பட்டது; இந்தியர்கள் மற்றும் கனடியர்களுக்கு மட்டுமே தகுதி விசா
    மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொலைத்தொடர்புச் சட்டம் மத்திய அரசு

    முதல் அமைச்சர்

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு தமிழ்நாடு
    ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு ஒடிசா
    தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு தமிழ்நாடு
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025