தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம். இவர் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாக சொல்லப்படுகிறது. எனினும், பிரைவேட் ப்ராக்டிஸ் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தனது முடிவை முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் அவர் தெரிவித்து, ரஜினிமான கடிதத்தை வழங்கி விட்டார் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2021-ல் திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசின் தலைமை வழக்கறிஞராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும் அடுத்த ஆண்டே பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஆனால், முதல்வர் கேட்டுக்கொண்டதற்காக, இந்நாள் வரை அரசு வழக்கறிஞராக பதவி வகித்தார் சண்முகசுந்தரம். புதிய தலைமை வழக்கறிஞரை அரசு விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.