NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள்
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள்

    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 15, 2023
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று:

    சட்டவிரோதமான பணபரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறையினரால், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

    18 மணிநேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நெஞ்சுவலி ஏற்படவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பைபாஸ் சர்ஜெரி செய்யவேண்டும் எனவும் கூறினார்கள்.

    இந்நிலையில், அவரை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் இருமுறை மருத்துவமனைக்கு விரைந்தார்.

    மறுபுறம், செந்தில் பாலாஜியின் மனைவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தொடுத்தார்.

    நேற்று மாலை, அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டது.

    card 2

    இன்றும் தொடரும் திருப்பங்கள்!

    நீதிமன்ற காவலுக்கு தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

    இன்று காலை வெளியான மருத்துவ அறிக்கையின்படி, அமைச்சர் சுயநினைவுடன் இருப்பதாகவும், இருதயத்தில் 90% அடைப்பு இருப்பதால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் கூறப்பட்டது.

    நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி இருப்பதால், அமைச்சர்கள் யாரையும், அவரை சந்திக்க அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

    இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும், மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கும் பொருட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இவரின் கைதில், மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாக, மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. இதற்காக, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் நேரில் விசாரித்தார்.

    இந்த வழக்கில் தொடர்ந்து பல திருப்பங்கள் நடைபெறுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்

    "செந்தில் பாலாஜிக்கு காது, தலையில் காயம்" - மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் #SenthilBalajiArrested #EnforcementDirectorate #News18TamilNadu pic.twitter.com/sy91N2L3m6

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) June 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    அமலாக்க இயக்குநரகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் ரெய்டு
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி

    தமிழ்நாடு

    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  மின்சார வாரியம்
    ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்: வேலூரில் பல லட்சம் லிட்டர் பால் திருட்டு தமிழகம்
    பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்!  நடிகர் விஜய்
    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: தமிழ்நாடு பதிப்பு!  உணவு குறிப்புகள்

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025