NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம்
    இந்த வழக்கில் நேற்று காவல்துறையினர் வடமாநில இளைஞர் ஒருவரை கைது செய்தனர்

    ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 30, 2024
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆவடி அருகே உள்ள மிட்னமல்லியில் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு சித்த மருத்துவரும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டது பரபரப்பானது.

    இந்த வழக்கில் நேற்று சென்னை காவல்துறையினர் வடமாநில இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

    அந்த இளைஞரை விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. ஆவடி அருகே உள்ள மிட்னமல்லியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர்.

    அவரது மனைவி பிரசன்னாதேவி, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இந்த தம்பதியின் மகனும் ஆயுர்வேத மருத்துவர் ஆவர். சம்பவ தினத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிவன் நாயர், பிரசன்னாதேவி இருவரும் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் 

    தடயங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் 

    வீட்டில் கிடைத்த தடயங்கள் உள்ளிட்டவையின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.

    கைதான மகேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: விசாரணையில் மகேஷ் சிவன்நாயரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    சிவன் நாயரிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரது வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைவதை பிரசன்ன தேவி கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று தம்பதிகள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மகேஷ், வீட்டிற்குள் மீண்டும் அத்துமீறி நுழைய, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மகேஷ், பிரசன்னா தேவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

    அதனை தடுக்க வந்த சிவன் நாயரையும் மகேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவ்வாறு ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    கைது
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    கொலை

    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை நாடாளுமன்றம்
    ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு  கேரளா
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது சிறை
    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை

    கைது

    2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை  செந்தில் பாலாஜி
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது துபாய்
    பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை பெங்களூர்

    காவல்துறை

    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி கொலை
    தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம் ஒடிசா
    அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு  கைது
    கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம் கோவை

    காவல்துறை

    சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு  சபரிமலை
    சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி  சேலம்
    மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்  மும்பை
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025