NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு 
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரவுபதி முர்மு

    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு 

    எழுதியவர் Nivetha P
    Jun 21, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச யோகா தினத்தினை கடந்த 2014ம்ஆண்டு முதன்முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஐநா.,வில் அறிமுகப்படுத்தினார்.

    அதிலிருந்து வருடாவருடம் ஜூன் 21ம்தேதி இந்த யோகாத்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று 9வது சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு பாஜக.,அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டாடி வருகிறார்கள்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரளா,கொச்சியிலுள்ள உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் யோகா செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "யோகா என்பது ஆசனங்கள் மட்டுமல்ல, கர்மா, ஞானம், மற்றும் பக்தி ஆகியவையோடு தொடர்புடையது"என்று கூறியுள்ளார்.

    இவரையடுத்து இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் யோகா செய்து இந்நாளினை கொண்டாடியுள்ளார்.

    யோகா 

    பள்ளி-கல்லூரி மாணவர்கள், திரைப்பட பிரபலங்கள், பொதுமக்கள் கொண்டாடிய யோகா தினம் 

    இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றுள்ளார்.

    அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, யோகா தினத்தினை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார்.

    மேலும் ஐ.நா.,வில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் யோகா தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அதேபோல் புதுச்சேரியில் தமிழிசை சௌந்தரராஜன் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அரசியல் தலைவர்களை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், திரைப்பட பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே ஆங்காங்கே நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யோகா
    பிரதமர் மோடி
    ராஜ்நாத் சிங்
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    யோகா

    மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள் மன ஆரோக்கியம்
    உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள் ஆரோக்கியம்
    யோகா: பதட்டமாய் உணருகிறீர்களா? இந்த சுவாசப் பயிற்சிகளை முயற்சிக்கவும் மன ஆரோக்கியம்
    யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள் உடல் நலம்

    பிரதமர் மோடி

    அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு  கடத்தல்
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா
    தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா

    ராஜ்நாத் சிங்

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக

    அமெரிக்கா

    'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்  இந்தியா
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா
    மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றது எலான் மஸ்கின் 'நியூராலிங்க்'! எலான் மஸ்க்
    கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்!  வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025