NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது?
    10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது?
    இந்தியா

    10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது?

    எழுதியவர் Sindhuja SM
    August 26, 2023 | 10:01 am 1 நிமிட வாசிப்பு
    10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது?
    இன்று அதிகாலை 5.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

    மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயில் பெட்டியில் இன்று(ஆகஸ்ட் 26) மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் சுற்றுலா ரயில் பெட்டிக்குள் இன்று அதிகாலை 5.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு இன்று காலை 7 மணிக்குள் தீ அணைக்கப்பட்டதால் ரயிலின் அருகில் இருந்த பிற பெட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ​​சில பயணிகள் அனுமதிக்கப்படாத சமையல் எரிவாயு சிலிண்டர்களை தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை தயார் செய்ய ரயிலுக்குள் பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. IRCTC இணையதளத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் பார்ட்டி ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யலாம்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் இந்த பெட்டியில் பயணித்தனர் 

    ஆனால், கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு இதில் அனுமதி கிடையாது. "இன்று அதிகாலை 5.30 மணியளவில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் உத்தரபிரதேசத்தை பக்தர்கள் பயணித்து கொண்டிருந்தனர். அவர்கள் காபி தயாரிக்க கேஸ் அடுப்பைப் பற்ற வைத்த போது கேஸ் சிலிண்டர் வெடித்தது. தற்போதைய நிலவரப்படி இதுவரை ஒன்பது உடல்களை மீட்டுள்ளனர்." என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா கூறியுள்ளார். இந்த பிரைவேட் பார்ட்டி ரயில் பெட்டியானது ஆகஸ்ட் 17அன்று லக்னோவில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை(நாளை) இந்த பெட்டி சென்னையை வந்ததைடய இருந்த நிலையில், இன்று இந்த மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    மதுரை ரயில் நிலைய தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ 

    #JUSTIN மதுரை ரயில் தீ விபத்து#maduraitrainfire #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/tpTYV1xLWl

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) August 26, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மதுரை
    ரயில்கள்
    தெற்கு ரயில்வே

    மதுரை

    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி அதிமுக
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு
    அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிமுக
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு  எய்ம்ஸ்

    ரயில்கள்

    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் சென்னை
    மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து மத்திய பிரதேசம்
    பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து பெங்களூர்
    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி பாகிஸ்தான்

    தெற்கு ரயில்வே

    பழங்கால நீராவி ரயில் என்ஜின் வடிவில் புதிய சுற்றுலா ரயில் அறிமுகம்  இந்திய ரயில்வே
    55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம்  இந்தியா
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு
    வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம் வந்தே பாரத்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023