NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குஜராத் கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குஜராத் கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி 

    குஜராத் கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2024
    10:12 am

    செய்தி முன்னோட்டம்

    குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று காலை நானா-மாவா சாலையில் உள்ள சம்பவ இடத்தையும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையையும் பார்வையிட்டார்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் (ஏசிபி) விநாயக் படேல் தெரிவித்தார்.

    "உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிவிட்டன. மேலும் இறந்தவர்களின் அடையாளத்தை அறிய உடல்கள் மற்றும் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் செயல்முறையை நாங்கள் முடித்துள்ளோம்." என்று அவர் கூறினார்.

    இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

    இந்தியா 

    இது குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு

    இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) 72 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதே இடத்தில் இன்று மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி இன்று அதிகாலை SIT குழு மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினார்.

    கேமிங் மண்டலத்தின் கட்டுமானத்திற்கு பொறுப்பான துறைகளை SIT விசாரித்து வருகிறது.

    நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்ட TRP விளையாட்டு மண்டலத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 ஐசியூ படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    தீ விபத்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    குஜராத்

    பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்  பலாத்காரம்
    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து திருச்சி
    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த குஜராத் மருத்துவர்கள் இந்தியா

    தீ விபத்து

    சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து  சேலம்
    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு  பாகிஸ்தான்
    குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு  குஜராத்
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025