NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்
    பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

    பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 26, 2023
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, மொத்தம் 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் அப்போதைய காவல் கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு டிஎஸ்பிகளும் அடங்குவர்.

    கடந்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி சென்றிருந்தபோது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது.

    அப்போது அங்கே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளின் முற்றுகையால், பிரதமரின் கான்வாய், மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது.

    பாஜக தலைவர்கள், அன்றைய சரண்ஜித் சிங் சன்னி அரசாங்கத்தை குற்றம் சாட்டிய நிலையில், பிரதமரின் பயணத் திட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக காங்கிரஸ் கூறியது.

    card 2

    காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

    இது குறித்து உச்சநீதிமன்றத்தை நாடியது இரு தரப்பும்.

    அதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, பாதுகாப்பு மீறலுக்கு பல மாநில அதிகாரிகளை காரணம் காட்டியது.

    அதன் தொடர்ச்சியாக, தற்போதைய பகவந்த் மான் தலைமையிலான அரசு, தவறு செய்ததற்காக ஏழு போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.

    குர்பிந்தர் சிங், அப்போதைய ஃபெரோஸ்பூர் காவல்துறை அதிகாரியாகவும், தற்போது பதிண்டா எஸ்பியாகவும் இருப்பவரும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    மேலும் 6 காவலர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி டிஎஸ்பி-ரேங்க் அதிகாரிகள் பார்சன் சிங், ஜகதீஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜதீந்தர் சிங், பல்விந்தர் சிங், சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பஞ்சாப்

    பயங்கரவாத விசாரணையாக மாறுமா காலிஸ்தான் தலைவர் பிரச்சனை இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம் இந்தியா
    அம்ரித்பால் சிங் தப்பி செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ இந்தியா

    பிரதமர் மோடி

    தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
    பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு ஸ்டாலின்
    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி இந்தியா
    மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம் மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025