NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 
    சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

    சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 21, 2023
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், போன்ற மாவட்டங்களில் இருந்தும் இப்பள்ளிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படிப்பதால் இங்கு விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    அண்மையில் தான் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

    இந்நிலையில், மாணவர் ஒருவர் தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த சத்துமாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நேற்று முன்தினம் மாலை வேளையில் தனது 5 நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டார் என்று கூறப்படுகிறது.

    அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 6 பேரும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்து மயங்கினர்.

    மயக்கம் 

    தேங்காய் எண்ணெய் என்று நினைத்து பேன் எண்ணெயை ஊற்றி உண்ட மாணவர்கள் 

    அதனை தொடர்ந்து அங்கிருந்த மற்ற மாணவர்கள் விடுதி காப்பாளருக்கு தகவலளித்துள்ளனர்.

    அதன் பேரில், அந்த 6 மாணவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.

    தகவலறிந்து அங்கு வந்த தேனாம்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, சத்துமாவு கொண்டு வந்த மாணவரின் பெற்றோர் அவரது தலையில் பேன் அதிகமாக இருந்ததால் தேங்காய் எண்ணெய் பாட்டிலில் பேன் எண்ணெயினை ஊற்றி கொடுத்துள்ளார்கள்.

    மாணவர்கள் அதனை தேங்காய் எண்ணெய் என்று தவறுதலாக சாத்துமாவில் ஊற்றி சாப்பிட்டதால் தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாணவர்களும் உடல்நிலை தேரி நேற்று(ஜூன்.,20) காலை நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  தமிழ்நாடு
    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி அரசு மருத்துவமனை

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025