NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்
    இதுகுறித்து வெளியான காவல்துறை அறிக்கையில், குமார் மது போதையில் தனது காரினை ஓட்டியபோது விபத்து ஏற்பட்டுள்ளது

    ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத்தில் ஒருவர் குடிபோதையில் பல விபத்துகளை ஏற்படுத்தியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

    30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் படர்லா கிராந்தி குமார், ஞாயிற்றுக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள ஐடி காரிடாரில், ஆறு நிமிட இடைவெளியில் ஆறு விபத்துக்களை ஏற்படுத்தியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியான காவல்துறை அறிக்கையில், குமார் மது போதையில் தனது காரினை ஓட்டியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    முதல் விபத்து மைண்ட்ஸ்பேஸ் அருகே நள்ளிரவு 12:45 மணிக்கு நடந்தது. கடைசி விபத்து நள்ளிரவு 12:51 மணிக்கு நடந்ததுள்ளது.

    போதையில் இருந்த குமார், மெஹிதிப்பட்டினம் சாலை வழியாக நிஜாம்பேட்டைக்கு சென்றபோது, ​​மூன்று பைக்குகள், கார், ஆட்டோ மற்றும் பாதசாரிகள் மீது மோதியுள்ளார்.

    புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை

    வண்டியை ஒட்டுமுன்னர் தரப்பட்ட அறிவுரையை புறக்கணித்தார் குமார்

    தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படி, குமார் கார் விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு ஒரு உள்ளூர் பாரில் நான்கு மணி நேரம் குடித்திருந்தார்.

    மது அருந்தியிருந்ததால் வண்டியை ஓட்ட வேண்டாமென பார் ஊழியர்களின் அறிவுரை தந்தபோதிலும், குமார், தான் ஓட்டும் திறன் கொண்டவர் என்று அவர்களுக்கு உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    குடிபோதையில் அவர் ஏற்படுத்திய விபத்துகள் காரணமாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹைதராபாத்
    விபத்து

    சமீபத்திய

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025: 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் ஆசிய சாம்பியன்ஷிப்
    கல்லூரி மாணவர்களில் யார் யாருக்கு தமிழக அரசின் லேப்டாப் கிடைக்கும்? வெளியான புது தகவல் லேப்டாப்
    சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி விமானப்படை
    இந்திய சந்தையில் ஹோண்டா சிடி 110 டிரீம் விற்பனை நிறுத்தம்; காரணம் என்ன? ஹோண்டா

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா

    விபத்து

    உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி  உத்தரப்பிரதேசம்
    பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம் பெய்ஜிங்
    சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம்  ரயில்கள்
    கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி  கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025