NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது 
    இதை ரயில்வே அமைச்சகத்தின் தலைமையகம் 24-மணி நேரமும் கண்காணித்து வந்தது.

    51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 07, 2023
    07:07 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வெள்ளிக்கிழமை, மிகப்பெரும் ஒரு ரயில் விபத்து ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்தது.

    இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து நடந்ததை அடுத்து, 2,300க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் 51 மணிநேரம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்து எதனால் நடந்தது என்பதை ஆராய தொடங்கினார்.

    சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது.

    அதன்பிறகு, அந்த வழியாக வந்த ஹவுரா ரயில், விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதியதால் அதுவும் தடம் புரண்டது.

    details

    ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பாலசோர் ரயில் பாதை மீண்டும் இயக்கப்பட்டது 

    70 உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தன. ரயில்வேயின் மூத்த பிரிவு பொறியாளர்கள்(SSE) தலா இரண்டு குழுக்களைக் கண்காணித்து வந்தனர்.

    மீட்புப் பணிகள் மட்டுமின்றி, ரயில் தண்டவாளத்தை சீரமைப்பதிலும் ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

    மறுபுறம், ரயில்வே வாரியத் தலைவர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை மேற்பார்வையிட்டார்.

    சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரல(டிஜி) புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் மேற்பார்வையிட்டார்.

    மீட்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், நான்கு கேமராக்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து நேரலை விவரங்களை ஸ்ட்ரீம் செய்தன.

    இதை ரயில்வே அமைச்சகத்தின் தலைமையகம் 24-மணி நேரமும் கண்காணித்து வந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரயில்கள்
    ஒடிசா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்! மத்திய அரசு
    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: டெல்லி பதிப்பு!  உணவு குறிப்புகள்
    திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? ரிசர்வ் வங்கி
    விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டிரைவர்  இந்தியா

    ரயில்கள்

    சென்னையில் போல மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் மதுரை
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை தெற்கு ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல் மதுரை

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025